Search This Blog

May 6, 2020

நம் நாட்டுக் குடிமக்கள்

நம் நாட்டுக் "குடி"மக்கள் 


கர்நாடகா , ஆந்திர மாநிலங்களில் சாராய விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டிலும் 7-ம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்படும்.

ஆனாலும்  அதுவரை கூடப் பொறுத்திருக்காமல், மாநில எல்லைப்பகுதிகளில் வசிப்போர், தடையையும் மீறி முண்டி அடித்துக்கொண்டு மது வாங்க எல்லை தாண்டிய படங்களை தொலைக்காட்சியில் கண்டு களித்தோம்!

7 ஆம் தேதி முதல் என்ன  நடக்கும் ?

ஒரு கையால்  அரசு தரும் உதவிப் பணத்தை  வாங்கி, மறு  கையால் அதை மதுக் கடைகளுக்குத் தாரை வார்க்கத்தான் போகிறார்கள்.

அன்புடன் 
ரமேஷ் 



வறுமைக் கோட்டின் கீழே 
-----வாடிடும் மக்கட் கெல்லாம் 
அரசினர் அவ்வப்  போது 
-----அளித்திடும் சிறுதொகை தன்னை 
வரிசையில் நின்று வாங்கி 
------வந்த பணத் தொகையுடனே  
திரும்பியே சென்று வீட்டோர்   
-------தேவையைத்  தீர்த்தி டாமல் 
விறுவிறு என்று ஓடி
------கிறுகிறு பானம்  வாங்க
வேறுஓர் வரிசையில் நிற்பார்! 
-----என்றிவர் திருந்து வாரோ! 

6 comments:

  1. நன்றி . பாணம் ( அ) பானம் ???

    ReplyDelete
    Replies
    1. Thanks for pointing out. You are correct. I will correct the mistake. Your comments still come as from "unknown". Please send me your coordinates so that i can incorporate them.

      Delete
  2. Very correctly said. The taxpayers money finally land in the liquor shops. Very sad.

    ReplyDelete
  3. என்று தணியும் இந்த 'குடி'ம(மா)க்கள் தாகம் என நன்றாக சொன்னீர்கள் ரமேஷ்
    மாரியப்பன் GCT70

    ReplyDelete
  4. Govt gives the money and the Govt taketh away. Why then the middlemen? Instead of money, they can directly give the liquor bottles. At least the people need not stand in Q twice. :-) :-(

    ReplyDelete
  5. Nice one . sad reflection of our country

    ReplyDelete