Search This Blog

Apr 10, 2020

இனிமையான எழுபத்தி ஐந்து !

 இனிமையான எழுபத்தி ஐந்து !

என்னுடைய சம்பந்தி திரு.வெங்கடராமனின் 75-ஆவது பிறந்த நாளன்று எழுதிப்  படித்த வாழ்த்து மடல்.

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு : என்னுடைய கவிதைகளின் தொகுப்பின் முழுமை கருதி , இந்த பதிவை இந்தத்  தளத்தில் பதிக்கின்றேன். ஆனால் இதனை முகநூல், மின்னஞ்சல் இவைகளில்   பகிரவில்லை.

எழுபத்து ஐந்தை எட்டி இருக்கும் 
கெழுதகை நண்பர் வெங்கட்ராம்!
பழுதெதும் இல்லா உடல்நலத்தோடு 
பலநாள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் 

தொழில்நுட் பம்பல  செயல்முறை ஆக்கச்  
செய்யும் முயற்சிகள் சிறப்புறவே - நீ 
வழிபடும் தெய்வங்கள் துணையாய் நின்று 
வெற்றியை அளிக்க வேண்டுகிறேன்.

நிலத்தடிக்  கரியை கல்நெய்* ஆக்கும்    
வழிமுறை தேடி நீபுரியும் 
பலநாள்  முயற்சிகள் யாவுமிவ்வாண்டு 
பலனைத் தரவே இறை அருள்க.

சிகைநரைத் தாலும் நகை நரைக்காத 
முகத்தில் சேர்த்த முறுவலுடன் 
நகைச்சுவை உணர்வை நாளும் வளர்த்து 
நண்பர்க ளோடு பகிர்ந்திடுக.

தடைகளை உடைக்கும் திடமிகு மனதை 
விடைவா கனத்தான் அருளிடுக !
உடலுறை குறைகள் உடன்விடு படவே 
உமையொரு பாகன் உதவிடுக !

அன்புடன் 

ரமேஷ் , வர்தினி 


* கல்நெய் = diesel / petrol




No comments:

Post a Comment