Search This Blog

Apr 4, 2020

கொரானா கவிதை - 9 - தினக்கூலி, வீட்டுவேலைத் தொழிலாளர்கள் குரல்

கொரானா கவிதை  - 9
தினக்கூலி, வீட்டுவேலைத்  தொழிலாளர்கள் குரல் 

இப்போதைய தனிப்படுத்தலால் எல்லோருக்கும் துயரம் என்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீட்டுவேலை செய்வோர்  , தினக்கூலித் தொழிலாளர் ஆகியோரே!

கொரானா  இங்கு நுழைந்ததிற்கு இவர்கள் எந்த வகையிலும்  காரணமல்ல!
இவர்களுடைய கேள்வி   - இதற்கு காரணமான மற்றோரை நோக்கி!

இது பற்றி எனது கல்லூரித் தோழர் வரதராஜனது மகள் எழுதி, அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஆங்கிலக் கவிதையை மூலமாக வைத்து, நான் எழுதிய பாடல் .


அன்புடன்

ரமேஷ் 


மூச்சுக்கு ஒருமுறை எனையழைக்கும் உந்தன்
பேச்சுக்கு மறுபேச்சு இன்றிநான் உழைத்தேன் 
இரைதேடி அதிகாலை வெளிச்சென்ற பறவை 
இரவிலே இசைபாடி பின்திரும்பும் வரையில்  
உன்னோடு நிழலாக உன்பின் இருந்து 
சொன்னதைச் செய்து துரும்பாய்நான் தேய்ந்தபின் 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென  பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

திரைகடல் கடந்தாய் திரவியம் சேர்த்தாய் 
விரும்பிய வழியெலாம் வீண்செலவு செய்தாய்!
வரைமுறை ஏதின்றி வாழ்க்கையைக் கழித்தாய் 
திரும்பநீ வருகையில் கிருமிகள் கொணர்ந்தாய்!
மருத்துவ மனைசென்று சோதனைகள் செய்தே 
திருத்தங்கள் செய்துவுன்  வேதனை விடுத்தபின்  

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் ! 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!


சிறியதோர் குடிலிலே எங்கள் குடும்பம் 
வறுமையின்  பிடியிலே வாடுகிறோம்   நிதமும்  
என்னுடைய மக்கள்  என்றுமெனைச்  சுற்றி , 
என்னுடைய தாய்தந்தை என்கையைப் பற்றி.
நாள்தோறும் எங்களது வாழ்வேயோர் வேள்வி. 
நாளையென் செய்வோம் என்பதே கேள்வி. 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

மாகாணம் விட்டு மாகாணம் வந்து 
நீகாப்பாய் நன்றாய் என்றுன்னை நம்பி 
உனக்காக உழைக்கின்ற தினக்கூலி மக்கள் 
சோகாத்து இந்நாள்  வாடுதல் சரியோ?
ஏகாந்த மாகநீ உள்ளொளிந் திருக்க 
தேகாந்த நிலையவர்கள் அடைவதும் முறையோ?

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!













3 comments:

  1. Very well written. But from a factual perspective, the servants or maids employed by individual households are by and large not affected as their income has been protected by their employers. It is the daily wage earners like auto drivers, plumbers, electricians, construction labourers, small vendors, etc. who are really affected with complete loss of income

    ReplyDelete
  2. Thanks for your comments. I hope everybody follows this in respect of household helps.

    ReplyDelete
  3. உள்ளத்தை உருக்கும் கவிதை . நன்றி

    ReplyDelete