Search This Blog

Apr 21, 2020

கொரானா கவிதை - 13- தேவை -- தொடர்ந்து கவனம்

கொரானா கவிதை - 13

தொற்று நோய் பரவும் வேகத்தைக் கணிக்க  R0 என்ற ஒரு விகிதத்தை பயன்படுத்துகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் , இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நோய் பரவுதல் தடுக்கப்பட்டு விட்டது  பொருள்.
ஒன்றுக்கு மேல் இருந்தால், நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒன்றுக்கு மேல் இருக்கிறதோ, அவ்வளவு நோய்  பரவும் வேகம் அதிகம் என்று கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இந்தியாவில் 1.75 ஆக இருந்த இந்த விகிதம், ஏப்ரல் 16 ல் 1.55 ஆகக்  குறைந்து இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
இது மற்ற பல நாடுகளை விட குறைவாக உள்ள விகிதம்!
தொடரும் ஊரடைப்பால் , இது இன்னும் குறையலாம்!
ஆனால் இதை எண்ணி நாம் கவனக் குறைவாக  ஆகிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

தேவை -- தொடர்ந்து கவனம்

( "தான தான தான தான தான தான தானனா " என்ற மெட்டில் படித்தல் சிறப்பு )

ஆ(ர்)ரு  நாட்டு*  என்ற  விகிதம்  இன்று  இந்தி  யாவிலே
வேறு   நாட்டை  விடவும்  மிகவும் குறைந்த  தாக  இருப்பினும்
ஊரு  அடங்கு  உத்  தரவை மாற்றி  விலக்கும்  பொழுதிலே
தாறு மாறாய் எகிரிப் போக வாய்ப்பு நிறைய உள்ளதால்

தூரம் காக்கும் விதி  முறையை தூரத்  தூக்கிப்  போடாதே!
காரு பஸ்ஸு  ரயிலி  லேறி  ஊர் முழுதும்  சுத்தாதே!
கறியும்  காயும்  வாங்க  வேண்டி  கோயம்  பேடு  போகாதே!
எரிந்து கொண்டு  இருக்கும்  நெருப்பில் எண்ணையை  நீ  ஊற்றாதே!

முறைமை**  ஏற்று    நிறைய   நாட்கள் இன்னும்  இருத்தல்  தேவையே!
பொறுமை யோடு  இருத்தல்  நீங்கள்  செய்யும்  பெரிய  சேவையே!

* ஆர்(ரு) நாட்(டு) = R nought , R0 = தொற்று னாய் பரவும் வேகத்தைக் குறிக்கும் விகிதம்
** முறைமை = அரச நீதி, ஒழுக்கம் 

5 comments:

  1. Looks like a silver lining in a dark sky. Let’s keep our fingers crossed ��

    ReplyDelete
  2. A timely and informative message
    SUNDER

    ReplyDelete
  3. Light seen across the tunnel- though length of tunnel is still unclear. We should maintain following the present guidelines.

    ReplyDelete
  4. We should continue with our discipline while you should continue with your lovely kavithais

    ReplyDelete