Search This Blog

Mar 24, 2020

இங்கினியும் நான் ஏன்?

இருண்ட எதிர்காலத்தை எண்ணி விடைதெரியாமால் வாட்டத்துடன் வெறித்த கண்களுடன் அமர்ந்திருக்கும் இந்த விவசாயின் புகைப்படத்தைப்  பார்த்து விளைந்த கவிதை இது.

அன்புடன் 

ரமேஷ்  (கனித்தோட்டம்)


இங்கினியும் நான் ஏன்?




கருக்காத மேகம் 
திறக்காத வானம் 
நீரற்ற  ஆறு
நிறையாத வாய்க்கால் 
சுரக்காத கேணி
வறண்டுள்ள வாவி 

----------இறக்காமல் நான்மட்டும் 
----------இங்கினியும் ஏன் ஏன் ?

விதைக்கா  நெல்மணிகள்
கொதியாத  உலைகள் 
வதைக்கின்ற வறுமையில் 
புதைந்துள்ள வாழ்வு 
துதிக்குமென் குரலை 
மதிக்காத இறைவன் 


----------இதுதானென் கதியெனின் 
----------இங்கினியும் நான் ஏன்? 

2 comments: