கொரானாக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு முழு அடைப்பை அறிவித்த அடுத்தநாளே, கடைகளில் கூட்டம் அலைமோதியது --
வேண்டியது, வேண்டாதது என்று பாராமல் எல்லாப் பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்வதற்காக!
எங்கே போயிற்று நம் சமூகப் பொறுப்பு?
அன்புடன்
ரமேஷ் (கனித்தோட்டம் )
கொரானா பாடல் - 5
கழிந்தது ஓர்நாள் இன்று,
-----கொரானா காய்ச்சலை முற்றும்
அழித்திட நாமே அளித்த
-----இருபத் தோர்நாள் கெடுவில்.
சேதிகள் பலவும் பரவும்,
-----பல்தளப் பதிவுகள் மூலம்.
ஏததில் உண்மையென் றறியோம்
-----பீதிகள் அடைதல் தவிர்ப்போம்
தடையினை மீறி வீட்டின்
-----வட்டம் விட்டுச் சென்று
கடைகளில் முட்டி மோதிப்
-----பொருள் வாங்கிக் குவித்தல் ஏனோ ?
தேவையை மீறிப் பொருள்கள்
-----வாங்கி வைப்பதைத் தவிர்ப்பீர்
நீவிர் இந்நாளில் செய்யும்
-----சேவையில் சிறந்தது இதுவே!
அறுசுவை உணவுகள் தினமும்
-----அடைவது குறைந்ததால் என்ன?
நொறுக்குத் தீனி வகையைத்
-----நாள்சில தவிர்த்தால் என்ன?
மருந்தென உணவை எண்ணி
-----உண்பதைச் சற்றே குறைத்து
இருப்பதை வைத்து இன்னும்
-----இருபது நாட்கள் கழிப்போம்
தெருவினில் உலவுதல் நீக்கி
-----சமூகத் தழுவல் தவிர்ப்போம்
வருவது நலமாய் நிகழ
-----இறைவனை வேண்டி இருப்போம்!
Dear Ramesh,
ReplyDeleteA timely, well worded advise. Hope you will get several followers like me.
SUNDER
Nice .
ReplyDeleteஅன்புள்ள ரமேஷ்
ReplyDeleteசரியான சாட்டையடி கொடுத்தாய் சமூக பொறுப்பு
தெரியாமல் அவசர தேவைக்கு வேண்டாத பொருள்களை வாங்கி குவித்து
தலைகால் புரியாமல் வினைகளை செய்யும் இவர்கள்
வைரஸ் கருணாவால் அவதிப்படுவாரோ !
அன்புடன் ராம்மோகன்
Yes Mr. Ramesh, very timely advice poetically. Best wishes for more poems. Regards NRS
ReplyDeleteKettadhum koduppavane Krishna,Krishna,
ReplyDeleteKetkaamale koduppavane,korana,korana