Search This Blog

Mar 28, 2020

வேண்டா விருந்தினர்கள் - கொரானா கவிதை -6


வேண்டா விருந்தினர்கள் - கொரானா கவிதை -6

ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர்களின் வருகையை குடும்பம் முழுவதும்  எதிர்பாத்திருக்கும் !

அந்தக் காலம் போய் , இன்று அவர்கள் வராமல் இருத்தலே நல்லது என்று எண்ணும்  நேரம்!

இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம் )



வரானா வெளிநாட்டு சொந்தம்  எனக்காத்(து)
இராமல் அவனிந்த நாட்டின் அருகின்   
வராமல் இருந்தால் நலமென்று ஆச்சு
கொரானா கிருமியால் இன்று .


                                                                                                              (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

No comments:

Post a Comment