Search This Blog

Feb 17, 2020

தன்வந்திரி ஆலயம்

தன்வந்திரி ஆலயம் 

சென்ற வாரம் கோவைக்குச் சென்றிருந்தபோது, நண்பர் மஹாதேவனிடம் அங்கு பார்க்க  இடங்களை பற்றி வினவினேன்.
அவர் பரிந்துரைத்த இடங்களில் ஒன்று " தன்வந்திரி ஆலயம்"
அங்கு சென்று வழிபட்டவர்கள் நோய்கள் முற்றும் குணமடையும் என்று கூறிய அவர், மேலும் "அங்கு சென்று வழிபட்டு அதைப்  பற்றிய பாடல் ஒன்றையும் எழுதலாமே " என்று கூறினார்!
அவர் வேடிக்கைக்குக் கூறியிருந்தாலும் , கோவில் சென்று தொழுகையில், ஒரு பாடல் உதித்தது.
அப்பாடல் , ஒரு வெண்பா வடிவில் !

அன்புடன்

ரமேஷ்

பின் குறிப்பு :

தன்வந்திரி இந்து மதத்தில் , மருத்துவத்திற்குக்  கடவுளாகவும், ஆயுர்வேதத்தின் தந்தையாகவும்  கருதப்படுகிறார்.

தன்வந்திரி ஆலயம் 

முன்வந்த நோய்த்துயரம்  முற்றிலும் நீங்கிடவும் 

பின்வந்து நோய்பலவும்  பீடித்தல் நீக்கிடவும் 

தன்வந்த்ரி கோயிலின் சன்னதியின் முன்னமே

நின்றுமன மொன்றி வணங்கு

                                                                                     ( ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

3 comments:

  1. Replies
    1. Thanks. That is the beauty of the வெண்பா format. Though the grammatical rules which define a வெண்பா are a bit difficult to execute ( atleast for me!) , It forces you say what you want in four lines. Of course, the குறள் is better, with just two lines!

      Delete
  2. அன்பா
    உன் தன்வெவந்திரி வெண்பாமாலை அருமை.
    ராம்மோகன்

    ReplyDelete