Search This Blog

Feb 9, 2020

GCT 70 - பொன்விழாப் பாடல்

GCT 70 - பொன்விழாப்  பாடல் 


சென்ற வாரம், என்னுடைய பொறியியல் கல்லூரியை விட்டு  , 1970 ம் ஆண்டு வெளிவந்த குழுவின் 50 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடந்த அந்த நிகழ்ச்சியில் நான் எழுதி படித்த பொன்விழாய் பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்
ரமேஷ்

GCT 70 - பொன்விழாப்  பாடல் 

அரைநூறு ஆண்டுகள் முன்னமிக் கல்லூரி
-----வளாகத்தின் வட்டம் விட்டு
திரையொன்றின் பின்நின்று தலைமட்டும் வெளிவிட்டு
-----வியந்திருந்த காலம் விலக்கி
கரைபுரண்டு விரைகின்ற காட்டாற்றின் நுரைபோல
-----களிப்புணர்வு பொங்கிப் பெருக
தரைமீது பாவாது துள்ளல்கால்  நடைபோட்டு
-----வெளியுலகம் காண வந்தோம்

பொறியியற் பாடங்கள் பலபடித்து தேர்வுற்று
-----பட்டங்கள் பெறுவ தொன்றே
குறியாக ஐந்தாண்டு குறைவின்றி உழைத்தபின்
-----பெற்றிட்ட பட்டம் கையில் !
பெரிதாக சாதனைகள் புரியவே வேண்டிடும்
----கனவுகள் கோடி மனதில்!
புரியாத புதுஉலகில்  இவ்விரண்டின் துணையோடு
-----உறுதியுடன்  கால் பதித்தோம்!

பட்டப் படிப்பிதுவே போதாது என்றெண்ணி
-----மேலும் படித்தார் சிலர்!
விட்டதினி வருடாந்ர பரிட்சைத் தொல்லையென
-----வேலைக்குச் சென்றோர் பலர்!
நாட்டினைக் காத்திடும் நற்பணிகள் செய்யவே
-----பட்டாளம் போனார் சிலர்!
காட்டுவோம் பிற்கால இளைஞர்க்கோர் வழியென்று
-----சுயதொழில் செய்தார் சிலர்!

துளியைப்* பிளந்ததை ஆராய்ச்சி செய்திடும்    (*துளி=அணு)
-----நிலையத்தில் சேர்ந்தார் சிலர்- வான்
வெளியைப் பிளந்திந்த  அண்டத்தின் அதிசயத்தை
-----ஆராய்ச்சி செய்தார் சிலர்!
நாடென்னும் எல்லைகள் நமக்கில்லை எனச்சொல்லி
-----கடலைக் கடந்தார் சிலர்!
வீடென்றும் உறவென்றும் பலதளைகள் பிணைத்ததால்
-----இங்கே இருந்தார் பலர்!

எப்பாதை எடுத்தாலும் எவ்வழியில் சென்றாலும்
-----அவ்வழியின்  நெறிமுறை யிலே
தப்பாது ஒருசிறிதும் தவறேதும் புரியாது
-----கடமைகள் ஆற்றி முடித்தோம்!
தகவுள்ள மகன்மகளை பெற்றெடுத்து அவரீன்ற
-----பெயரன் பெயர்த்தி களுடன்
அகங்குளிர  மிகநேரம் மீண்டும்சிறு பிள்ளைபோல்
-----ஆடியே மகிழுகின் றோம்!

ஆண்டுகள் ஐம்பது ஓடியே முடிந்துநாம்
-----கூடுமின் நன்னா ளினில்
மீண்டும்நம் காளைப் பருவ நிகழ்வுகளை
-----பகிர்ந்து பேசி நெகிழ்வோம்!
இப்போது இன்னேரம்  நிறைந்தநல்  மனதோடு
-----நண்பரொடு  கூடுகின் றோம் !
எப்போதும் இந்நினைவு நமைவிட்டு  அகலாமல்
-----மனக்கூட்டில் பூட்டி வைப்போம்!



அன்புடன்

ரமேஷ் ( கனித்தோட்டம்)

7 comments:

  1. அருமை ரமேஷ்�� It was a delight to meet and spend some time with you. Stay Blessed!!

    ReplyDelete
  2. It is very thoughtful of you to put your poem in the net. Hope GOD will help us celebrate the Diamond Jubilee in another decade and we all can hear your another poem then. Congratulations to you.
    S A Subramanian

    ReplyDelete
  3. நன்றி ரமேஷ்.

    அருமையான பதிவு.

    Can you please send me a group photo. Though I spent only 2 years at GCT, I still remember many of our class mates. Hope some of them may still remember me.

    It was god's plan that we meet for some time and continue our journey in different roads.

    It gives me immense pleasure that you met me in my home last year for attending the happiness program of the art of living that renewed our contact after 1967. Hopefully we will meet as often as we can.

    Please invite me for any get together of GCT 70 batch.

    I attended the Golden Jubilee meet on 6th Feb. 2020 at College of Enginnering Guindy and I shall send my group photo to you in a separate mail.

    with best wishes

    S.Karthikeyan
    9791009653



    ReplyDelete
  4. ramesh, you also had 50th year of passing out of school where you met our school mates. Why not a poem on comparing the two

    ReplyDelete