Search This Blog

Jan 14, 2020

மார்கழிப் பிரசாதம்

இன்று மார்கழியின் கடைசி நாள்!

என் இள  வயது மார்கழி மாத நினைவுகள் இவை -

1. பசுஞ்சாணியில் பூசணிப் பூ செருகி வைத்து வாசலில் இடப்பட்டும் கோலம்.
2. அதிகாலையில் தெருவில் திருப்பாவை  பாடிச் செல்லும் பஜனை குழுக்கள்;
3. காலை ஐந்து  மணிக்கே  கோயில் விஜயம் .
4. இறைவனை வணங்கியபின் ஓடிச் சென்று வாங்கிச் சாப்பிடும்        நெய்ப்பொங்கல் பிரசாதம்!

சிறுவயதில், தீபாராதனை முடிந்தவுடன்,  முட்டி மோதி முன்னாலே  போய் நின்று , பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கும் உண்டா?

இந்த பொங்கல் பிரசாதத்தைப்  பற்றி, மார்கழியின் கடைசி நாளன்று  ஒரு லிமெரிக் கவிதை !

அன்புடன் 

ரமேஷ் 


( ஒரு ஹிந்தி மொழிச் சொல்லோடு)

பனிவழியும்  மார்கழித் திங்கள்  
நெய்வழியும் பிரசாதப் பொங்கல் 
-------வரிசை  முறைகள் மீறி 
-------மற்றவர்   முதுகில் ஏறி 
வாங்குவதோ மிகப்பெரிய "டங்கல் " *  

"டங்கல் " =*डंगल ;(Dangal ) ; ஹிந்திச் சொல் ; பொருள் =  குஸ்திச்  சண்டை 

(வேற்று மொழிச் சொல் இல்லாமல்) 

பனிவழியும்  மார்கழித் திங்கள்  
நெய்வழியும் பிரசாதப் பொங்கல்
-------வரிசை  முறைகள் மீறி 
-------மற்றவர்   முதுகில் ஏறி 
வாங்குவதி  லென்னத டங்கல்?














1 comment:

  1. மயிலையில் வாழ்ந்த காலம் , மார்கழி திங்களில் விடிகாலை பொழுதில் துடங்கும் மார்கழி பஜனை , கூடவே சென்றால் முடிவில் கிடைக்கும் சுடச்சுட பொங்கல்.வாழை இலையில் தருவார்கள். வாங்கி தின்ற நாட்கள் நினைவு உண்டு.அந்தமாதிரியான பாலகால அனுபவங்கள் மனத்துக்கு இனிமைதருபவை

    ReplyDelete