Search This Blog

Sep 30, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஐக்கிய நாடுகள் அரங்கில் உரையாற்றிய பாரதப் பிரதமர், கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் கருத்தை  மேற்கோள் காட்டிப்  பேசியது , தொன்று தொட்டு நிலவி தமிழரின் பரந்த மனப்போக்கை உலகிரிக்குப் படம்போட்டுக் காட்டியிருக்கிறது. 
இந்த மேற்கோளை மேற்கொண்டதால்  இந்தப் பேச்சு  மேலும் சிறந்து விளங்கியது என்றால் அது மிகையாகாது. 

இதை பற்றி ஒரு வெண்பா.

அன்புடன் 
ரமேஷ் 


யாதும்  ஊரே யாவரும் கேளிர்

மூவாயிரம் ஆண்டு முன்னமே முத்தமிழ்ப்
பாவாணன் பாடிய பாடலை - வாயுரையில்
சேர்த்துப்   பிரதமர் பேசியதா லப்பேச்சு
நேர்த்தி நிறைந்ததாய் ஆச்சு 

(பல விகற்ப இன்னிசை வெண்பா) 

No comments:

Post a Comment