Search This Blog

Sep 29, 2019

கலைவாணி

நவராத்திரிப் பண்டிகையன்று கலைமகளைத் துதித்து ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கலைவாணி 



தோளினில்   சாய்த்த மரகத வீணை 
-----ஒலித்திடு  மோர்பூ பாளம் 
காலினில்  பூட்டிய வெள்ளிக் கொலுசுகள் 
-----போடும் தகதை தாளம்.

சிரித்த முகமும் சரித்த கழுத்தும்
-----கரங்களில் ஏந்திய எழுத்தும் 
கருத்த கூந்தலும் கொண்ட கலைமகள்
-----உலகம் அவளை வழுத்தும்.

No comments:

Post a Comment