Search This Blog

Sep 29, 2019

கண்ணுக்கு வராத கனவு - (யாணர் கூடல் பாட்டு- 1)

யாணர் கூடல் பாட்டு- 1 

யாணர் கவிதைக்கு குழுமம் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் அறுசீர் விருத்தத்தையும் எழுதினேன். 
நான்  இந்தியாவில் அப்போது இல்லாத காரணத்தால் அவைகளை கூடலில் படிக்குமாறு அனுப்பி வைத்தேன். 
அப்பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக என் கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன்.
அவற்றில் முதல் பாடல் , இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


கண்ணுக்கு வராத கனவு 

கருக்கல் இருட்டு அரைத்தூக்க நேரம் 
உறக்கம் கலையாத வேளை - பிறக்கின்ற  
எண்ணத் திழைகள்  விழித்தால்   மறையுமிது 
கண்ணுக்கு வாராக்  கனவு .

(பல விகற்ப இன்னிசை வெண்பா )

No comments:

Post a Comment