Search This Blog

Sep 13, 2019

கமலாத்தாவின் இட்டலிகள்



கோயம்பத்தூர் வடிவேலம்பாளையம் கிராமத்தில் ,  தனது  கையாலலேயே  அரைத்த மாவால், விறகு அடுப்பில் தினமும் ஆயிரம் இட்டலிகள் சுட்டு , அவற்றை ஒரு இட்டலிக்கு  ரூபாய் ஒன்றுக்கு   மட்டுமே  விற்று , அப்பகுதி மக்களுக்கு சேவை செய்து வரும் எண்பது வயதான " இட்டலிப்  பாட்டி"கமலாத்தா  அனைவருக்கும் ஒரு வழிகாட்டி!
அவர்  பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!
அவரது  சேவை பற்றி ஒரு பாடல் !

அன்புடன் 

ரமேஷ். 

கமலாத்தாவின் இட்டலிகள் 




இட்டலி  கள்இட்டு ரூபாய்க்கு ஒன்றென்று
சுட்டு  வழங்கும்  கமலாத்தா - தொட்டுக்க
சட்டினி சாம்பாரை  மட்டும் தராமல்
தருகிறாள் தாயன்பும் சேர்த்து


(இருவிகற்ப இன்னிசை வெண்பா )




No comments:

Post a Comment