Search This Blog

May 31, 2019

பிரதோஷப் பாடல் - 19

பிரதோஷப் பாடல் - 19

பிஞ்செ ழுத்து என்னும் அகர  உகர மகர ஓமுடன் *
அஞ்செ ழுத்து மந்தி ரத்தை காலை மாலை வேளையில் 
நூறு எட்டு** தடவை சொல்லி  தியானம்  செய்து வருபவர்க் 
கீரு எட்டு*** செல்லு வங்கள் இனிது  வந்து சேருமே  

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

 *அ, உ , ம  என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வரும் ஒளி ஓம் என்பது. இதை     பிஞ்செழுத்து என்று குறிப்பதுண்டு.
** - நூறு எட்டு = நூற்றியெட்டு 
*** - ஈரு எட்டு = ஈரெட்டு = பதினாறு.; 16 வகை செல்வங்களும் கிட்டும் 

அன்புடன் 

ரமேஷ் 

No comments:

Post a Comment