Search This Blog

Mar 29, 2018

பிரதோஷப் பாடல் - 5

பிரதோஷப் பாடல்- 5

இன்றைய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வணங்கி ஒரு வெண்பா .

அன்புடன்

ரமேஷ்







தில்லையில் நில்லாத  கூத்தாடும்  ஈசனை 
சொல்லிலும் சிந்தையிலும் கொள்ளாத  தேசனை
வில்(லு)வ இலைகொண்டு நாம்செய்யும்  பூசனை
வல்வினைகள் போக்கிடும் காண்.
                                                                                      (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
கொள்ளாத = அடங்காத
தேசன் = ஒளிமயமானவன்
பூசனை = வழிபாடு, பூஜை 

1 comment: