வைகுண்ட ஏகாதசி
இன்று வைகுண்ட ஏகாதசி.
இந்நாளில் அனைவருக்கும் திருமாலின் அருள்சேர வேண்டி ஒரு சிறு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
வைகுண்ட ஏகாதசி
பாற்கடலில் பாம்பின்மேல் பொய்த்துயிலில் துய்த்திருக்க
பொற்பாதம் லட்சுமியும் நீவிவிட - கார்மேக
வண்ணத்தான் காட்சிதரும் பேரழகை நாள்தோறும்
எண்ணவே இப்பிறப் பாம்.
( பலவிகற்ப இன்னிசை வெண்பா)
இன்று வைகுண்ட ஏகாதசி.
இந்நாளில் அனைவருக்கும் திருமாலின் அருள்சேர வேண்டி ஒரு சிறு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
வைகுண்ட ஏகாதசி
பாற்கடலில் பாம்பின்மேல் பொய்த்துயிலில் துய்த்திருக்க
பொற்பாதம் லட்சுமியும் நீவிவிட - கார்மேக
வண்ணத்தான் காட்சிதரும் பேரழகை நாள்தோறும்
எண்ணவே இப்பிறப் பாம்.
( பலவிகற்ப இன்னிசை வெண்பா)
Its fine. No comments.Rammohan
ReplyDeleteதுயிலும் பெருமாளுக்குப்பின்
ReplyDeleteஆடும் அரசன் வரவேண்டாமா?
ஆதிரை அன்று ஆடும் அழகை பதிவிடுக
பார்வைக்கும் பதிவுக்கும் நன்றி!
Deleteஉங்கள் விருப்பத்துக்கிணங்க ஆதிரையான் மேல் இரு சிறு பாடல்கள் - இவைகளைத் சிறு திருத்தங்களுடன் சீக்கிரம் பதிப்பேன்!
1.
மாதினைப் பாதியாய்க் கொண்டவன் நந்தனின்
சாதியைப் பாராமல் ஆதிரைத் தாரகையில்
வீதிக்கு வந்தே தரிசனம் தந்தவன்
மாதிரியோர் தெய்வமுண் டோ?
2.
காதினிக்கும் 'சிவாய நம'வெனும் நாமத்தை
ஓதியே தொழுபவர்க் கெல்லாம் - மேதினியில்
சாதிக்க இயலாத செயலொன்றும் உண்டோ
ஆதிரையான் அவனருளி னால் .
Super....அது என்ன பலவிகற்ப இன்னிசை வெண்பா? அப்பவே சொன்னார் VVN நண்ணூல் சூத்திரம் நன்னா படிச்சுக்கோன்னு. அப்பாவும், இப்பவும், எப்பவுமே ஏறமாட்டைங்குது...
ReplyDelete