Search This Blog

Oct 7, 2017

சங்கட ஹர சதுர்த்தி

சங்கட ஹர சதுர்த்தி 

பௌர்ணமிக்குப் பின், தேய்பிறையில் வரும் சதுர்த்தியே விநாயகப் பெருமானுக்கு உகந்த  சங்கட ஹர சதுர்த்தி.
இதை பற்றிய பல புராணக் கதைகள் உண்டு.
இந்திரன், பகவான் கிருஷ்ணன் , அனுமன், அகலிகை போன்ற பலரும் இந்த சதுர்த்தி பூஜையால் பலனடைந்ததாக ஐதீகம்.
இந்த சதுர்த்தி நாள் அன்று, இதுபற்றி ஒரு வெண்பா..
விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக!
அன்புடன்
ரமேஷ்


சங்கட ஹர சதுர்த்தி 

பொங்கிவரும்  பால்நிலவுப் பௌர்ணமியின் நான்காம்நாள்
மங்கிவரும் தேய்பிறையின் திங்களையே நோக்கிப்பின் 
துங்கக் கரிமுகத்துத்  தூயவன்றன்   தாள்பணிவோர் 
சங்கடங்கள்   நீங்கிவிடும் காண் 

1 comment:

  1. அன்புள்ள ரமேஷ்

    உன் சங்கடசதுர்த்தி வெண்பாவைப்படித்து என் சங்கடங்கள் எல்லாம் நீங்கிவிட்டன.

    மிக்க நன்றி. மேன்மேலும் வெண்பாவை உதிர்த்து விட்டால் உங்களுக்கு கோடி புனியம்.

    நண்பன் ராம்மோகன்

    ReplyDelete