Search This Blog

Oct 19, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 17, 18

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 17 ,18


ஈசாவாஸ்ய உபநிஷத்தின் கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இந்தப் பதிவில். 

சரியோ தவறோ , ஒரு  தைரியத்தில் இந்த உபநிஷத்தை பாடல் வடிவில் அமைக்கவேண்டும் என்ற ஆவலுடன் இதைச் செய்ய முனைந்தேன். இந்த முயற்சிக்கு அடிகோலாய்  இருந்தது, ராமகிருஷ்ணா மடப் பதிப்பகத்தின்  பதிப்பான,  ஈசாவாஸ்ய உபநிஷத்தைப் பற்றிய , சுவாமி அசுதோஷானந்தாவின், புத்தகமே. அவருக்கு எனது மானசீகமான நன்றி. இறையருளால் இதை முடித்துவிட்டேன். 

உபநிஷத்தின்  உட்பொருளை என் பாடல்கள் சற்றேனும் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன். 

முந்தைய பதிவுகளை படித்து ஊக்குவித்த  அனைவருக்கும் நன்றி.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :
இதனுடன் நிறைவு பெரும் இந்தப் பகுதியின் முந்தைய இணைப்புகளைப்  பற்றிய விவரங்களை (( 1 முதல் 16 ஸ்லோகங்கள், அவர்களின் மொழிபெயர்ப்பு, அவை குறித்த எனது பாடல்கள்) கீழே தந்திருக்கிறேன்.  கீழ்கண்ட தொடர்புகளில் காணலாம்.

http://kanithottam.blogspot.in/2015/1/blog-post_22.html
http://kanithottam.blogspot.in/2016/12/1-2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3_17.html
http://kanithottam.blogspot.in/2016/12/4-5.html
http://kanithottam.blogspot.in/2017/01/6-7_6.html
http://kanithottam.blogspot.in/2017/01/8.html
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
http://kanithottam.blogspot.in/2017/02/11.html
http://kanithottam.blogspot.in/2017/02/12-13-14.html
http://kanithottam.blogspot.in/2017/06/15-16.html






மொழிபெயர்ப்பு **

இந்த  உடம்பு (ஒருநாள்)  சாம்பலாக மாறும்! உடம்பிலிருந்து வெளியேறும் பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற ப்ராணனுடன் கலந்துவிடும். (அதனால்) மனமே, செய்தவற்றை நினைத்துப் பார்!  

எங்கள் எல்லாச் செயல்களையும்  அறிந்த அக்னிதேவனே , ஒளிப்பொருளே!  வினைப்பயனை அனுபவிக்கும் பாதையில் வழிநடத்தி , எங்களைத் தவறுகளில் இருந்து விலக்கு. உமக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.


Translation **

May my life merge with in the Immortal
When my body is reduced to ashes.
O mind, medidate on the eternal Brahman.
Remember the deeds of the past.
Remember, O Mind, remember

O God of fire , lead us by the good  path'
To eternal Joy. You know all our deeds.
Deliver us from evil, we  who bow
And pray again and again.

விளக்கம் *


ஆண்டியானாலும் அரசனானாலும் , எல்லார் உயிரும் ஒரு நாள் வெளியேறி ,உடம்பும்  சாம்பலாக மாறும்! நம் செயல்களின் பலனே நிலைக்கும். நிலையற்ற இந்த வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து தினமும் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை ஆராய்ந்து ஒரு சுய சோதனை செய்ய வேண்டும்.  

எங்கள் எல்லாச் செயல்களையும்  அறிந்த ஒளிப்பொருளே!  நாங்கள் புரிந்த செயல்களின் வினைப்பயனை அனுபவிக்கும் பாதையில் வழிநடத்தி , மேலும் வினைப்பயன் சேரா வண்ணம் நாங்கள் நற்செயல்களே புரிய அருள் செய்திடு.

பாடல் 



மண்ணிற் பிறந்தோர் உடல்கள் ஒருநாள் எரிதழற் கிரையாகும் 
விண்ணை நிறைக்கும் ப்ராண   னுடனவர்  உயிரும் கலந்துவிடும்..
தினம்செயும் செயல்களின் நன்மை தீமையின் வினைப்பயன்                                                                                                                                       தொடர்ந்துவரும் 
மனமே அதனால் செய்த செயல்களை தினம்தினம் எடைபோடு!


எங்கள் செயல்களை எல்லாம் அறியும் எழுநாக்  குடையோனே!
மங்கா ஒளியே! அனுபவப்  பாதையில் எங்களை நடத்திவிடு.
மறச்செயல் விலக்கி அறச்செயல் புரிந்து சாஸ்வத சுகமடைய 
இறைவா உந்தன் பாதம் பணிந்து பலமுறை வேண்டுகிறோம்.




*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam, Chennai-4 


**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books






1 comment:

  1. அன்புள்ள ரமேஷ் ,
    நீ இதுவரை விளக்கம் அளித்துள்ள 18 ஈசா வாஸ்ய உபநிஷத் செய்யுள்களையும் ஒன்றாக படிக்க ஏதுவாக ஒரு முறை blog இல் வெளியிட முடியுமா

    ReplyDelete