Search This Blog

Sep 15, 2017

நவ துவாரங்கள்

நவ துவாரங்கள்

ஏன் இரண்டு கண்கள், காதுகள், நாசித்  துவாரங்கள் கொடுத்த ஆண்டவன், ஒரு வாய்த்துவாரம் மட்டும் கொடுத்திருக்கிறான்?
இந்த சிந்தனையில் எழுந்த கவிதை இது.
படித்துப் பார்த்து/ கேட்டு , கருத்துப் பதியுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

நவ துவாரங்கள்

மண்ணில் பிறந்த அனைவருமே
----------மகிழ்வுற வாழும் விதமாக
எண்ணிக் கொடுத்தான் இறைவனுமே
----------உடலில் ஒன்பது துவாரங்கள்

செவிகள் இரண்டு கேட்பதற்கு
----------கண்கள் இரண்டு காண்பதற்கு
சுவாசம் செய்து ஜீவிக்க
---------- இரண்டு துவாரம்  மூக்கினிலே.

நாத்திறம் காட்டவும்  சாப்பிடவும்
-----------முகத்தினில் இருப்பது வாயொன்று.
மூத்திரம்  மலஜலம் கழித்திடவே
----------- ஒவ்வொரு துவாரம் உடலினிலே.

காண, கேட்க  , காற்றிழுக்க
-----------இரண்டிறண் டோட்டைகள் தந்தாலும்
உண்ணவும் பேசவும் ஒன்றைத்தான்
------------இறைவன் அளித்ததின் பொருளென்ன?

உண்பதை உரைப்பதை சுருக்கிடுக
------------ காண்பதைக் கேட்பதைப்  பெருக்கிடுக
மன்பதை உறைவோர் அனைவருக்கும்
-------------முதலாம் பாடம் இதுதானே!

உதடுகள் என்னும்   கதவுகளை
-------------திறந்திடும் நேரம் குறைத்திடுவோம் .
இதமாய் இனியவை  பேசிடுவோம்.
-------------மிதமாய் உண்டு மகிழ்ந்திடுவோம்.










3 comments:

  1. very relevant and interesting

    rajmohan

    ReplyDelete
    Replies
    1. You had written in the blackboard once - " One can achieve more by keeping his mouth closed than by keeping his eyes open ". This poem reflects that !

      Delete