Search This Blog

Sep 11, 2017

ஆலங்குடி ஆஞ்சநேயர்

ஆலங்குடி ஆஞ்சநேயர் 





                                                           








என்னுடைய சென்ற பதிவிலே ஆலங்குடியில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயரைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன்.

இங்கிருக்கும் ஆஞ்சநேயர் , விஸ்வரூப சங்கடஹர மங்கள ஆஞ்சநேயர் என்று அறியப்படுகிறார்.

இந்த ஆஞ்சநேயர், சஞ்சீவினி மலையிலிருந்து எடுக்கப்பட்ட  விஷால்ய கரணி  , சவரண கரணி  , சந்தான கரணி , ம்ருத சஞ்சீவினி  என்னும் நான்கு வித மூலிகைகளைத் தன்  இடுப்பில் முடிந்து வைத்திருப்பதைக் காண முடிகிறது. இதுவே இவ்விக்கிரஹத்தின்  தனித் தன்மை.

அறுபது டன் எடையும், முப்பத்தி இரண்டு அடி  உயரமும் கொண்ட இந்த ராமதூதனைப் பற்றி , கலி  விருத்தத்தில் அமைந்த ஒரு பாடல் இப்பதிவில் .


அன்புடன் 

ரமேஷ் 

ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கும் படங்கள் கீழ்கண்ட பதிவிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டவை. 
gkamesh.wordpress.com/tag/alangudi-hanuman
ஆலங்குடி ஆஞ்சநேயரைப் பற்றிய முழுத்  தகவல்களையும் அறிய விரும்புவோர் இந்தப் பதிவை அணுகலாம்.



ஆலங் குடிக்கு  இருகல்* அருகே
சாலை மருங்கில் ஞான புரியில்  
சிலை வடிவாக அனுமனின் தோற்றம்
மலையென எழும்பி முகில்தொடும் ஏற்றம்.

முப்பத் தீரடி  கற்சிலை வடிவில் 
செப்பர்க் கரிய விஸ்வரூ பத்தில்
சங்கடம் அறுக்கும்   மங்களத் தோற்றம்**
இங்கே  காண்போம்  ! இதற்கிணை ஏது ?

சஞ்சீ வினிமலை தனையடி பெயர்த்து 
அஞ்சன வண்ணனின் இளவலைக்  காத்தோன் 
இடர்களை யும்நால்   மூலிகை***  களைத்தன்  
இடையி லிருத்திய   இறைவனை வணங்கு.


செஞ்சுட ரோனைப்  பந்தென் றெண்ணி
பிஞ்சு வயதிலதைப்   பிடிக்கப் பறந்தோன்****  
பஞ்சென லங்கையை தீயிட் டெரித்த   
அஞ்சனை  புத்ரன் அனுமனை வணங்கு

அகழா  ழியினைத்   தாண்டிச்   சென்று
பகையோர்  நடுவில்  பாவையைக் கண்டு
கணையா ழிதந்து   கலக்க மொழித்த 
இணையில்  மாருதி  வீரனை வணங்கு

(கலி  விருத்தம்)

* -  The place where it is situated is known a gnanapuri and is about two miles before alangudi in the main road, as we travel from Kumbakonam
**- The Anjaneyar is known as Viswaroopa Sangadahara Mangala Anjaneyar.
***- Tucked in his waist are the four Mooligaigal Vishalya Karani, Savarana Karani, Santhana Karani and Mrita Sanjeevini each having different curative properties.
****- Reference is made to the legend in which Hanuman,  as a young kid, flies towards the Sun, mistaking it to be a ball which he wanted to play with.





1 comment:

  1. அருமை!! அருமை!!!!
    ஆஞ்சநேயரின் பெருமை
    அலர்மேலு ரிஷி

    ReplyDelete