Search This Blog

Aug 22, 2017

தவிக்கும் தமிழ் நாடு -இன்றைய தலைப்புச் செய்திகள்- சுடச் சுட

இன்றைய தலைப்புச் செய்திகள்- சுடச் சுட 

1. அதிமுக-வின் இரண்டு அணிகள் இணைந்தன.
2. மோடி  அரசின் மிரட்டலுக்கு இரு அணிகளும் பயந்தே இது நடக்கிறது - ஸ்டாலின்
3. 18 -எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு. எங்களை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்த முடியாது- தினகரன்.
4. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜா.க நிரப்பும்.
5. "ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவோம்; அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்"- தி.மு.க
6. தமிழ்நாடு மக்களுக்கு கோமாளிக் குல்லா போடுகிறர்கள்  ஆட்சியாளர்கள்-- கமலஹாசன் ட்விட்டர் பதிவு.
7. சரியான நேரம் பார்த்து அரசியலுக்கு ரஜினி வருவார்-- ரஜினி ஆதரவாளர் தமிழருவி மணியன்.

இச்செய்திகள்  பாடல் வடிவில் கீழே !

அன்புடன்

ரமேஷ்

தவிக்கும் தமிழ் நாடு 

ஓபிஎஸ்சும் ஈபீஎஸ்சும் குடுமிப்பிடி சண்டையை
வாபஸ்வாங்கி கைகுலுக்கி  கட்டிப்பிடித்து நிற்கிறார்.
மோதிமுட்டிக்  கொண்டிருந்த அணியினரிவர்  இருவரும் 
கூடிவரக் காரணமே மோடிஅரசின் மிரட்டலோ ?

ஓரங்கட்டி ஒதுக்கப்பட்ட மன்னார்குடி மாபியா
நேரம்பார்த்து நெத்தியடி அடிப்பேன்னு சொல்லுறார்.
பதினெட்டு பேரோடு பாண்டிச்சேரி போகிறார்,
பதுக்கிஅங்கே அவரைவைத்து சதுரங்கம் ஆடுறார்.

சைடுவாங்கி வேடிக்கை பார்த்திருந்த ஸ்டாலினும்
சைக்கிள்கேப்பு சந்தில்பூந்து ஆட்சிகவுக்கப் பாக்குறார்.
சேரஒரு ஆளுமின்றி சோர்ந்திருந்த பா.ஜா.கா.
நேரமிதே என்றுஎண்ணி  தலையைத்தூக்கப் பாக்குது.

ஆளுகின்ற ஆட்சியினை அன்றாடம் ட்விட்டரில்
ஆளவந்தான் நடிகருமே  அலசிஅலசிக் கழுவுறார்
ஆளநானும் அரசியலில் குதிப்பேன்என்ற  ரஜினியும்
ஆளான பொண்ணுபோல ஒதுங்கியோரம்  நிக்குறார்.

ஆளாளுக் கிவர்கள் போடும்  அக்கப்போரும்  கூச்சலும் 
தாளாமல் தமிழ்நாட்டு மக்களுமே தவிக்கிறார்.
ஆளுநரின் ஆட்சிஉடன்  வந்தால்தான் மட்டுமே 
மீண்டும்நம்ம மாநிலத்துக்கு விடிவுகாலம் கிட்டுமே !

பின் குறிப்பு : (24-8-17 அன்று பதிவு செய்தது )

இந்தப் பாடலைப் படித்த நண்பர் மகேந்திரன், தெரிவித்த கருத்தும், அதற்கு நான் அளித்த பதிலும் இதோ. 

மகேந்திரன் _ 

திருமாவும் , அன்புமணி ராமதாஸும் ஆளுக்கொரு பக்கமாய் அறைகூவல் விடுக்க, நடைபயண நாயகன் கலைஞரை தரிசனம் செய்தது ஏன்? அடையும் கொஞ்சம் சொல்லலாமே! 

என் பதில் :
போயஸ் தோட்ட வீடுகையை விட்டுப்போன நிலையிலே
வாயடைத்து நிற்கின்றார் தீபாவும் தீபக்கும்
டாக்டர் குடும்பத்தார் விடுகின்ற சௌண்டையொரு
பாக்டரா பொதுமக்கள் கேட்டு மதிப்பதில்லை 
பெரும்பாலும் திமுக சொல்வதையே எதிரொலிக்கும்
திருமாவுக் காகவொரு தனிப்பகுதி தேவையில்லை
மைக்கெங்கு கிடைத்தாலும் கையெடுத்து முழங்குகிற
வைக்கோவின் செய்கைகளின் பொருளும் புரிவதில்லை.













13 comments:

  1. Good One sir. You have covered everybody. Especially Super star with suitable phrase. 👍👍👍

    ReplyDelete
  2. Excellent. One of your best. May I request you to polish a bit on your addendum as a reply to your friend's query - the "thalakkattu" does not gel well with the main song. For instance, in the first line "nilaiyile" will rhyme & sound better than ":nilamaiyile"

    ReplyDelete
    Replies
    1. Yes. You are right. This was done in a hurry. I have changed now.Thanks for pointing this out.

      Delete