Search This Blog

Jul 28, 2017

முப்பெரும் பெண் தெய்வங்கள்

சென்ற வாரம் பதிப்பித்திருந்த "பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் பற்றிய குழந்தைகளுக்கான பாடலைப் பற்றி கருத்துத் தெரிவிவித்து இருந்தவர்களுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும்  நன்றி.
முப்பெரும் ஆண் தெய்வங்கள் பற்றிய பதிப்பைத்  தொடர்ந்து , அவர்களின் துணைவியராகவும், சக்தியின் மூன்று வடிவங்களாகவும் இருக்கும் முப்பெரும் பெண் தெய்வங்களான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி பற்றிய ஒரு சிறு பாடல் - குழந்தைகளுக்காக.

அன்புடன்
ரமேஷ்






முப்பெரும் பெண் தெய்வங்கள்




ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா
அப்பா பின்னே  இருப்பதுபோல்
சிவன் பிரம்மா திருமால் பின்னே
சக்தி ஒருவள் இருக்கின்றாள்.


 





சக்திக்கு உருவம் மூன்றுண்டு-  அவை
சரஸ்வதி,பார்வதி,லட்சுமியென்பார் .
பக்தியுடன் தினம் இருவேளை - அவள்
பாதம் தொழுது பயனுறுவோம்.                        








கலைமகள் என்று பெயர்கொண்டு- ஆய
கலைகளை அளித்தவள் சரஸ்வதியே!
விலைமதிப் பில்லாப் பொருளான- கல்வி  
அறிவினை  அருள்வது அவள்தானே!








பார்வதி என்பவள் மலைமகளாம்- அவள்
வீரத் திற்கே  உறைவிடமாம்.
யாரெவர் நம்மை எதிர்த்தாலும்- நாம்
அவளருள் இருந்தால் வென்றிடுவோம்









திருமகள் என்னும்  லட்சுமியே   - நற்
செல்வம் நமக்கு அருள்பவளாம் .
பொருளும் பொன்னும் குறைவின்றி - தன்னைத்
தொழுவோர்க் கெல்லாம்  அளித்திடுவாள்.                  







இந்த மூவரையும்  அனுதினமும்-நாம்
வந்தனை செய்து வழிபட்டால்
வந்தடையும்  நம் அனைவரையும்- உயர் 
கல்வியும் செல்வமும் வெற்றிகளும் .






























.

No comments:

Post a Comment