Search This Blog

Jul 8, 2017

செயற்கை

இயந்திர கதியில் செல்லும் இன்றைய வாழ்க்கையில் உடலும், உள்ளமும் இயற்கையை விடுத்து செயற்கைக்கு அடிமை ஆகி விட்டன!

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

செயற்கை


புரை விழுந்த*  கண்ணில்       திரைவிழுந்த பார்வை-        *cataract
சரிசெய்ய  அதையே     விழிவில்லை* அணிந்தோம்..        * artificial lens
கேட்கின்ற ஆற்றலை      காதுகள்  இழக்க
மீட்க அப்புலனை     செவித்துணை* அணிந்தோம்               * hearing aid

மைய்யெனக் கருத்த    முடிகொட்டிப் போக
பொய்  மயிர்த் தோகை*      போட்டதை மறைத்தோம்.          * wig
பல்லெலாம் உதிர்ந்து      சொல்குளறும் பொது
கட்டுப்பல் வரிசை*      கட்டிச்சரி செய்தோம்.                            *artificial dentures


கால்சியம்  சத்து      குறைவான  தாலே
கால்கை எலும்புகள்      பலவீன மாக
கீழே விழுந்துடைந்த      காலெலும்பைக் சேர்க்க
டைட்டானி*  யத்தில்       தகடுகள் புதைத்தோம் .                     * titanium

துடிக்கும்  இதயத்தின்       ஆற்றலைத் தூண்டி
முடுக்கும்  கருவியை*        மேல்வைத்துத் தைத்தோம் .          * pace maker
மூட்டுகள் தேய்ந்து       வலிவந்த தாலே
முட்டிகளை மாற்றி      புதிதாக வைத்தோம் .

பாதிக்கு மேலான       இயற்கை உறுப்பு
பாதிப்புக் குள்ளாகி       செயற்கையாய்ப்  போச்சு
இதனால் தானோ      இன்றுநம்  முகத்தின்
உதட்டுச் சிரிப்பும்      உயிரற்ற  பூச்சு!

சந்தனமும்  நீறும்     நெற்றியில் பூசி
வந்தனம் இறைவனை      செய்திடும் வேளை
சிந்தனைகள்  சிதறி       எங்கெங்கோ செல்ல
செய்யும் தொழுகைச்      செயல்களும்  செயற்கை.

வண்ணங்கள்  மட்டும்       உடல்மேலே   ஏற்றி
வாசனை  விடுத்த       காகிதப் பூப்போல்
எண்ணிச் செய்கின்ற        ஈடுபா  டின்றிநாம்
செய்யும் செயல்கள்      அனைத்துமே  செயற்கை

இயற்கையோ டுறவுகள்        முற்றும்  முறிந்து
செயல்களும்  சிந்தனையும்       செயற்கையாய்ப் போச்சே!
இந்நிலைமை மாறி       உடலோடு மனமும்
நன்னிலைமை அடையும்      நாளென்று வருமோ?










11 comments:

  1. A natural worry beautifully expressed with humour entwined
    SUNDER

    ReplyDelete
    Replies
    1. Thanks for the nice response - with accent on the "natural"!

      Delete
  2. அன்புள்ள ரமேஷ்
    உன்னிடமிருந்து இயற்கையாக வெளிவந்த
    செயற்கை பற்றிய கவிதை அற்புதம் அற்புதம் அற்புதம்
    உன் இயற்கையான நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
    Replies
    1. மோகன் , நன்றிகள உங்கள் கருத்துப்பதிவுக்கு!
      '

      Delete
  3. One of your best VR - really top class
    NK

    ReplyDelete
  4. Ramesh,this is a wonderful post with your language and poetry skills in full bloom.

    ReplyDelete
  5. எவ்வுறுப்புப் போனாலும் அதற்கென வேறு வந்தாலும்
    இவ்வுறுப்பு எனதில்லை எனும் கருத்து எனதா? அல்லது
    அந்த உறுப்புடையதா? ஒவ்வொருமுறையும் கேட்கும்
    அந்த நானைப் பிடிப்பதே நம் வாழ்வின் இலக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல, உங்கள் கருத்துப்பதிவுக்கு!
      'அந்த நானைப் பிடிப்பது " வாழ்வின் இழக்க, அல்லது "அந்த நானை
      விடுப்பது" வாழ்வின் இலக்கா ?

      Delete
  6. இவ்விதம் செயற்கை உறுப்புகள் பல சேர்த்தாலும் உண்மையான என்னை நான் அறிய, எந்த செயற்கை
    உறுப்பு எனக்கு துணை வருமோ அதையாவது எனக்கு கொடுத்து அருள்வாயே எனது ஈசனே !

    ReplyDelete
  7. செயற்கை மனிதனையே உருவாக்க அறிந்திருக்கும் நமக்கு இன்னும் இயற்கையை உணரும் மனமும் மிஞ்சி இருக்குமா?. கவிதை மிக அருமை

    ReplyDelete