Search This Blog

Jun 16, 2017

எந்தன் மகனேகோவிந்தா - 4

எந்தன் மகனேகோவிந்தா - 4

கோவிந்தனும் அவன் தந்தையும் பேசுவது போல் அமைக்கப்பட்ட  பாடல் வரிசையில் இது நான்காவது. இந்தப் பதிவில் , இன்றைய தமிழ் நாட்டின்  அரசியல் நிலைமையைப் பற்றி,  கோவிந்தனின் கேள்விகளுக்கு தந்தை பதில் அளிக்கிறார். மேலே படியுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

முந்தைய "கோவிந்தா" பதிவுகள்  படிக்க --

http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3.html


எந்தன் மகனேகோவிந்தா-4

தந்தை  :

எந்தன்   மகனே    கோவிந்தா
           என்ன   கவலை   இன்றுனக்கு?
உந்தன்   அகண்ட    நெற்றியிலே
            சிந்தனைக்   கோடுகள்   காண்கின்றேன்.

கோவிந்தன் :

நாட்டு   நடப்பைப்   பற்றித்தான்
              நாளும்   கவலைப்   படுகின்றேன்
கேட்பேன்  கேள்விகள் அப்பாவே
              பதில்நீ   கூறணும்    இப்போவே
அ.தி    மு.க    ஆட்சியுமே
              கவிழப்   போகுது   என்கின்றார்
அதிகம்   ஓரிரு   மாதங்களே -   இதன்
              ஆயுசு   என்பது   சரிதானா?

தந்தை :

ஒட்டுப்   போட்ட   மக்களுக்கு
              பட்டு   வாடா   செய்தபணம்
மீட்க   இன்னும்   மாதம்பல
              ஆகும்   என்ற   காரணத்தால்
ஆட்சி   கவிழ   விடமாட்டார்
              ஆனால்   தமிழகம்   கவிழ்ந்து விடும்.

கோவிந்தன் :

கோடி   கோடியாய்   பணம்கொடுத்து
              குதிரைப்   பேரம்   செய்தசெய்தி
ஊடகங்களை    நிறைக்கிறதே -   அதைப்
              பார்க்கும்   மக்கள்   என்னசெய்வார்?
அடுத்த   தேர்தல்   வருகையிலே
              அநியா   யத்தை   செய்தவரை
அடித்து   விரட்டி   விடுவாரா?
               ஜனநா    யகத்தைக்    காப்பாரா?

தந்தை : 

கோடி    கோடியாய்   பணம்பெற்ற
            கூவத்   தூரின்   கும்பலையும்  
வாரிவாரி   அதை   வள்ளல்போல்
            வழங்கிய    கட்சித்   தலைமையையும்
நிச்சயம்   சும்மா   விடமாட்டார்
             நீதியைக்   கேட்டு   பொங்கிடுவார்!
"எம்எல்    ஏ-க்கு   கோடிகளா?
             எமக்குக்   கேவலம்   ஆயிரமோ ?
திருமங்    கலத்தில் தொடங்கியது
             அரவங்    குறிச்சியில்   அதிகரித்து
இராதா   கிருஷ்ணன்   நகரினிலே
             இரண்டு   மடங்காய்    உயர்ந்தாலும்
இன்று   எமக்குக்    கிடைத்தபணம்
             நாலே    நாலு    ஆயிரமே!
வரட்டும்   அடுத்த   தேர்தலுமே!
             வாங்குவோம்   வட்டியும்   முதலு"மென
உரத்து    உரைத்து   இருக்கின்றார்.
             பொறுத்து   இருந்து    நாம்பார்ப்போம்!


           
           
           
   

             






           


               

2 comments:

  1. Thanks, Raman. Both for your appreciation as well as for using this comments option.

    ReplyDelete