Search This Blog

May 23, 2017

நில்லாத நடம் புரிவோய், அருள்நீயே! - (பிரதோஷப் பாடல் 1)

நில்லாத நடம்புரிவோய் , அருள்நீயே!
(பிரதோஷப் பாடல் 1)

"ஆசைகளும் , உலகப்பற்றுகளும்  துன்பங்களுக்கு வித்து " என்பதை பல ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இளம் வயதில் ஆசைகளைத் துறப்பது  கடினம்தான்.
ஆனாலும், இளமையில் இன்பங்களை அனுபவித்த பின்பு, வயது முதிர , முதிர ஆசைகளைத் துறப்பது சுலபமாக அல்லவா ஆகவேண்டும்?
இதுவும் அவ்வளவு  எளிதாக  இல்லையே!
இந்தப் பற்றில்லா நிலைமை வந்தடைய, நடராசப் பெருமானை வேண்டி  இன்றைய பிரதோஷப்   பாடல் .


அன்புடன் 

ரமேஷ் 


நில்லாத நடம்புரிவோய் !

துள்ளியே    விளையாடும்   இளமைப்   பருவங்கள்
தள்ளியே   ஆண்டுபல    போனபின்னும்
பல்லாடி நரைவிழுந்து  பார்வையும் புரையோடி 
தள்ளாடித் தடியூன்றும்  நேரத்திலும் 
உள்ளாடும் மனதினில் உலகத்து ஆசைகள்
நில்லாது நீக்கிட்ட நிலை காண 
சொல்லோடு பொருள்போல உமையோடு இணைந்திட்டு
நில்லாத நடம்புரிவோய் ,  அருள்நீயே!




1 comment: