Search This Blog

May 28, 2017

சோ

சோ 


சோ ராமசாமி அவர்கள் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதை எழுதி இந்த "கனித்தோட்ட"த்தில் பதித்திருந்தேன். 
என்னுடைய பதிவுகளிலே மிகுந்த வரவேற்பைப் பெற்ற  கவிதைகளில்  இது ஒன்று.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்,  துக்ளக் இதழில்  இது , சில சிறு மாற்றங்களுடன், வெளியிடப்பட்டிருக்கிறது. ( பக்கம் 27 ).
இதை மீண்டும் ,  வெளியிடுவதில் மகிழ்ச்சி  அடைகிறேன்!

அன்புடன்
ரமேஷ்



சோ" என்று பெய்து கொண்டிருந்த  மழை நின்று விட்டது .

இந்த மழை --
வாரம் தோறும் நம்மை நனைத்து வந்த
கருத்து மழை !
மேடையிலும், வெள்ளித் திரையிலும் பொழிந்து வந்த
சிரிப்பு மழை.
நம் மனக் குளங்களை நிரப்பி வழிந்து வந்த
மகிழ்ச்சி மழை.
குடையின்றி, தடையின்றி வேண்டியே நாம்
நனைந்த மழை.

மழை நின்றால் வானம் வெளுக்கும்!
ஆனால்
இந்த மழை நின்றதால் , மனம் இருண்டதே!

அரசு கட்டிலில் யார் அமர்ந்த போதும் -
ஏமரா மன்னர்களை இடித்துரைத்து , அவ்வுரையை
பாமர மக்களையும் படிக்க வைத்து - அவர்கள்
ஏமாறா  திருக்கச் செய்த
எழுத்தாளன் .

அங்கதத்தில் அரசன் !
அதையும்
இங்கிதமாய்ச் சொல்லி
எவரையும் ரசிக்க வைத்த
நடிகன் .


IS GOD DEAD - என்ற  கேள்வி எழுந்தாலும்
இந்த "சரஸ்வதியின் செல்வன் "
மீண்டுமிவ் யுகத்தில்  சம்பவித்து வருவானென 
நம்பிடுவோம் , நாம் இன்று --

WHY NOT?
பொறுத்திருந்து பார்ப்போம் !
Let us WAIT AND SEE !

அதுவரை 

அன்னாரின் ஆன்மா சாந்தியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்




No comments:

Post a Comment