Search This Blog

May 20, 2017

அற்புதங்கள்

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஓடுவதிலும், எதை  எதையோ தேடுவதிலும் கழித்து ஒழித்துவிட்டபின், நாம் காணும்  காட்சிகளில் புதைந்து கிடக்கும் அற்புதங்களை சற்று ரசித்தால்  என்ன?

After having spent the best part of our life running after things , why not step back and find some time to enjoy the beautiful things of nature?

அன்புடன் 

ரமேஷ் 


அற்புதங்கள் 





மேகமில்லா  நீல வான நிர்மலம் ஒரு  அற்புதம் 
தேகமில்லா தென்றல் காற்று முகம் தழுவுதல் அற்புதம் 
தேசமில்லா பறவைக் கூட்டம்  பறக்கும் காட்சி அற்புதம். 
பாசத்தோடு அன்னை மகவை அணைக்கும் காட்சி அற்புதம் 


வாலை யாட்டி சுதந்திரமாய் நீல வானந்  தன்னிலே 
 நூலறுந்த  பட்டம் ஒன்று மிதக்கும் காட்சி அற்புதம் 
மேலிருந்து முகம் நனைக்கும்   மழையின்  தூறல்  அற்புதம்
பாலருந்தும் குழந்தை முகத் தோற்ற முமே  அற்புதம் 

வானும் மண்ணும் அற்புதம் ; வாழும் யாவும் அற்புதம்;
கானும்  மலையும்  அற்புதம்; கடலும் நதியும் அற்புதம்
நானும் நீயும் அற்புதம். நீரும் நெருப்பும் அற்புதம்.
ஆணும் பெண்ணும் அற்புதம்; காணும் யாவும் அற்புதம்;

ஆன தெல்லாம்  அற்புதம்;  ஆகப் போவ  தற்புதம் .
காணும் காட்சி யாவிலும் காணு கிறேன்  அற்புதம்
நாளை என்ன நடக்குமென்று நாம் அறியாப்  போதிலும் 
நிச்சயமாய் அதை நடத்தும்   இறைவன் விதி  அற்புதம். 

இயற்கை படைத்த எதுவிலும் இருபுடை யிவை* வற்புதம்
இயற்கையையே  யார்  படைத்தார்?  வணங்கிடு அவர் பொற்பதம்.
இவ்வுலகில் நாம் வாழும்   காலம் மிகவும் சொற்பமே.
அற்புதங்கள் யாவும் கண்டு அனுப விக்கக்   கற்பமே !

*இருபுடை இயைவு-- symmetry




2 comments:

  1. Great poem on wonders.Well done Ramesh.

    ReplyDelete
  2. On request from Ramesh, here I am recording what I sent to him earlier by mail:

    அற்புதம் நடுவே பொற்பதம் மறவா அற்புதமே!
    சொற்பதம் தன்னில் சொல் உடலாயின்
    பதம் உயிரானால் அவை இரண்டா ஒன்றா?
    இதம் தனை இப்போதே காண்பதுவும் அற்புதமே!

    - S Raman

    ReplyDelete