Search This Blog

Apr 30, 2017

தமிழா! விழித்தெழு!


சில நாட்களுக்கு முன்பு  நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பு மேற்கொண்ட  ஒரு கணக்கெடுப்பின்படி, தமிழ் நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறது. கருநாடக மாநிலம் முதல் இடத்தையும், ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இது எல்லாத் தமிழர்களுக்கும் கவலையை வரவழைக்கும் ஒரு செய்தி.
இது பற்றி ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புடன் 
ரமேஷ் 

முக்கியமான பி.கு: 
நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பின்  கணக்கெடுப்பு பற்றிய குறிப்பை கட்டுரையின் முடிவில் காண்க.

தமிழா! விழித்தெழு!

தமிழா! விழித்தெழு!
தூங்கிவிட்டாயா?
கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்தே முன்தோன்றி மூத்தவன் நீ!
விந்தியத்தின் தென்திசைத்  திராவிடத்திருநாட்டின் தலைமகன் நீ!
மற்ற திராவிட இனங்களுக்கு முன்னோடி நீ!

இப்படி இருக்கையில்

அண்டைத்   திராவிட நாடுகளான கர்நாடகமும் ஆந்திரமும்  உன்னை மிஞ்சிவிட்டனவே!
கர்நாடகம் காவிரித் தண்ணீரைத் தர மறுக்கலாம்!
நாமும் அதை மறந்துவிடலாம்!
ஆந்திரம் கிருஷ்ணா நதி நீரைத் தராமல் இருக்கலாம்!
அதையும் நாம் மன்னித்துவிடலாம்!

ஆனால்-

இன்று இந்த  இரண்டு மாநிலங்களும்  நம் தமிழ் நாட்டை மிஞ்சி விட்டனவே!
இது பெரும் இழுக்கன்றோ?
இந்த நிலைமை உடனே மாற
விழித்திடுவோம்!  கொதித்தெழுவோம் !

"கே"வும் "ஜே "வும், பதவியில் இருக்கையில்  
கனியும், சசியும் உதவிகள் செய்கையில்  
மாறன்,ராஜா, மற்ற "மாண்பு"களும்   
விழுக்காடு பெற்றே பழுதில்லாமல் வேலையை   முடிக்கும்   அலுவலர் பலரும் 

இவர்கள் எல்லாம் இருக்கும் வரையில்
லஞ்ச லாவண்யப்  போட்டியில் நம்மை மிஞ்சிட  ஒருவரும் இல்லை என்று 
இறுமாந்திருந்த நிலைமை மாறி  
மூன்றாம் இடமே இன்று பெற்றோமே !
இந்த நிலை இன்னும் நீடிக்கலாமோ?

வீறு கொண்டுநீ விழித்தெழு தமிழா ! 
வெற்றி விரைவில் வந்து உன்னை  அடையும்!

Context :

Survey Report by Niti Aayog 
Karnataka, Andhra Pradesh & Tamil Nadu Most Corrupt:
Of  20 states surveyed , people in Karnataka (77%) faced corruption the most in accessing public services. This is followed by Andhra Pradesh (74%) and Tamil Nadu (68%),











3 comments:

  1. என்ன ஒரு அவமானம். எல்லோரும் முனைந்து எப்படியாவது அடுத்த ஆண்டு முதலிடத்தை பிடிச்சுடணும்!!!

    ReplyDelete
  2. அருமை உண்மை முதலிடம் வெகுதூரத்தில்இல்லை!

    ரமேஷ்! உங்கள் கவிதை இவ்வாரத் துக்ள்கில்!

    ReplyDelete
  3. There can not be a better satire than this

    ReplyDelete