Search This Blog

Feb 16, 2017

கூவத்தூரில் குழுமியிருக்கும் -

கூவத்தூரில் குழுமியிருக்கும் ----


நீண்ட நாட்களாக கூவத்தூரில் குழுமி வெளியே வர மறுக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களை நினைத்தால் ஒரு புறம் கோபமும் ஒரு புறம் தமிழக அரசியல் இவ்வளவு கேவலமாக ஆகிவிட்டதே என்ற  அவமானமும் வருகின்றன.
தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியான  ஜல்லிக்கட்டைக் காக்க அமைதியாகவும், உறுதியாகவும் போரிட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்த தமிழகம் இன்று கேலிப் பொருளாக மாறிவிட்டது.
உறுப்பினர்கள் யாரை ஆதரித்தாலும் , தைரியமாக வெளியே வந்து அவர்கள் தொகுதி மக்களுக்கு தம் கருத்தையும் , அதற்கான காரணங்களையும்  கூறாமல் ஒளிந்து கொண்டு இருப்பது , பல விதமான சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
இதற்கு எப்போது முடிவு?
அன்புடன் 
 ரமேஷ் 

கூவத்தூரில் குளிர்காற் றறையில்
------குழுமியிருக்கும் கோழைகளே!
கூவி மக்கள் கொடுக்கும்  குரல்கள் 
------காதுகளிலே விழவில்லையா?
ஏவல் செய்யும் அடிமைகளாகவே
------எத்தனை நாளின்னும் இருந்திடுவீர்?
காவலை உடைத்து வெளியே வந்து 
------மக்களுக்கே பதில் உரைப்பீர்.
சசியோ ப.செ.வோ யாருக்காயினும் 
------சுதந்திரத்துடன் செயல்பட்டு 
விசுவாசத்தை ஒட்டுப் போட்ட 
-------நாட்டு மக்கட்கே காட்டிடுவீர்.






4 comments:

  1. கூவத்தூரில் அடைபட்டோருக்கு அரைகூவல் விட்டிரோ!

    ReplyDelete