Search This Blog

Feb 18, 2017

குறள் மேல்வைப்பு வெண்பா - 15

குறள் மேல்வைப்பு வெண்பா - 15

தர்மம் செய்தில் ஈடு இணையற்றவன் கர்ணன் என்பது நாம் அறிந்ததே. தன் உடலுடன் ஒட்டியுள்ள உயிர் காக்கும் கவசத்தை , மாறு வேடத்தில் வந்து யாசித்த இந்திரனுக்குத் யோசிக்காமல் அளித்தவன் கர்ணன். 

*கர்ணனின் கொடைப் பெருமையை அர்ஜுனனுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய கிருஷ்ணர், கர்ணன்  குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், மரணப் படுக்கையில் இருக்கும்போது, ஒரு அந்தணன் வேடமிட்டு வந்து யாசகம் கேட்டகிறார். மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திலும், இல்லை என்று சொல்ல மறுத்தான் கர்ணன். தன் வாயில் இருந்த  தங்கப் பற்களை உடைத்து , அவற்றைத் தானமாக அளித்த பின்னரே உயிர் நீக்கிறான் கர்ணன்.  

* Lord Krishna wanted to demonstrate to Arjuna the generosity of Karnan and how he does not say No to anyone asking for alms. When Karnan was lying in his death bed in Kurukshetra, he comes disguised as a Brahmmin and asks Karnan for alms. Loathe to return him empty handed, Karnan breaks a few of his artificial teeth which were of gold and gives it to the Brahmin, even as he was nearing death. 

ஒருவர் யாசிப்பதை, இல்லைஎனச் சொல்லாமல் , அவர் கேட்டதைக் கொடுப்பதால் தனக்கு ஏதும் கேடு நேருமோ என்பதையும் கருதாமல், அவர்கள் கேட்டதை அளிப்பவரே சிறந்த கொடையாளி. 
இத்தகையோர் , "பிறர் கேட்டதை தம்மால் கொடுக்கமுடியாது என்ற  நிலைமை வருமானால் , அதைவிட உயிர் நீத்தலே மேல் எனக் கருதுவர் " என்கிறார் திருவள்ளுவர்.

சாதலின் இன்னாத தில்லை இனிததுவூம்
ஈதல் இயையாக்  கடை.                                           (குறள் எண் 230; அதிகாரம் - ஈகை )


ஆனால் மரணப் படுக்கையிலும் இல்லை என்று சொல்லாத கர்ணனோ , இதைவிட ஒருபடி மேலாக அல்லவோ சென்றுவிட்டான்! 

இந்த வகையில்  ஒப்பிடும்போது, எவரும் கர்ணனுக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிகழ்ச்சியை மேல் நிறுத்திய ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா : 

மரணப் படுக்கையிலும் தானமெனக் கேட்டவர்க்கு
கர்ணன்தன் பல்லுடைத்து தங்கத்தைத்  தந்தானே!
சாதலின் இன்னாத தில்லை இனிததுவூம்
ஈதல் இயையாக்  கடை.
    English version of Rev. Pope
    'Ts bitter pain to die, 'ts worse to live                                                                                  For one who finds nothing to give
    English version of Suddhaanandha Bharathi
      Nothing is more painful than death
      Yet more is pain of giftless dearth.
    Meaning :
    Nothing is more unpleasant than death ; yet, even that is pleasant when there is nothing to give.

அன்புடன் 

ரமேஷ் 


No comments:

Post a Comment