Search This Blog

Dec 17, 2016

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 3

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 3
இந்தப் பதிவிலிருந்து , ஸ்லோகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் ( ஏக்நாத் ஈஸ்வரனின்  " The Upanishaths " என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து) சேர்த்திருக்கிறேன். புரிதலுக்கு இது மேலும் உதவும் என்று நம்புகிறேன்.
சென்ற பதிவிலும் இந்த மாறுதலைச் செய்திருக்கிறேன். சென்று பார்க்கவும்.
அன்புடன் 
ரமேஷ் 




மொழிபெயர்ப்பு :*
அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.

Translation : **
Those who deny the Self are born again
Blind to the Self, enveloped in darkness
Utterly devoid of love for the Lord


பாடல் :

புத்தி , பிராணன், மனம், உடல், ஆன்மா
----------ஐந்தின் தொகுப்பே நம் பிறப்பு
ஆத்(ன்)மா விலக்கி அறநெறி ஒதுக்கி
----------ஐம்புலன் சொல்வழி செல்வோமால்
காரிருள் கவ்விடும் அரக்கர்தம் உலகை^ 
----------அடைந்து  மாளாத்  துயருறுவோம்.
பிறப்பிறப் பென்னும்  முடியாச்  சுழலில்
----------மீண்டும் மீண்டும் சிக்கிடுவோம்


^ - தொடர்ந்து பிறவிக்கு உள்ளாவதை,  "இருண்ட  அரக்கர் உலகம்" என்று கூறப்பட்டது. --"enveloped in darkness".

பொருள் விளக்கம்  :*
உடம்பு+பிராணன்+ மனம்+புத்தி+ஆன்மா = மனிதன் 
பிராணன்+ மனம்+புத்தி = உயிர்.
ஆன்மாவை அழிப்பவர்கள்=ஆன்மாவை நினைக்காமல், உடம்பே   ( ஐம்புலன்களே )  எல்லாம் என்று வாழ்பவர்கள் 
அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு , தொடர்ந்து பிறவிகளுக்கு உள்ளாகிறார்கள்.

* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books





2 comments: