Search This Blog

Dec 14, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா -14

குறள் மேல்வைப்பு வெண்பா -14

சங்க கால தமிழ்க் கவிஞர்கள் இடையே ஒரு தனியிடம் பெற்றவர் ஒளவையார் .
வேளிர்குல மன்னனும் , கடையேழு வள்ளல்களில் ஒருவனுமான  அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைப் புலவராக இருந்த ஒளவையார் அதியமானின் கொடையைப் பற்றியும் , அவனது வீரத்தைப் பற்றியும் பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.
அதியமான் , அவ்வையிடம் கொண்டிருந்த அன்பு அளவிடற்கரியது.
ஒரு சமயம் , அதியமானுக்கு ஒருவர் மிகச் சக்தி வாய்ந்த, நரை, திரை , மூப்பு ஆகியவற்றை நீக்கி, உண்பவரின் ஆயுளை அதிகரிக்கக் கூடிய, ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தார். அதியமான் , அந்த நெல்லிக்கனியை அடைவதற்கு தன்னைவிடத் தகுதியானவர் ஒளவையாரே  என்று கூறி , அதைத் தான் உண்ணாமல் ஓளவைக்கு  அளித்து மகிழ்ந்ததாக  வரலாறு.

"ஒருவனுக்கு வந்தடையும் செல்வம், தகுதி உடைய மற்றோருக்கு அளிப்பதற்கே"  என்ற பொருளுள்ள குறளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ( அதிகாரம் - ஒப்புரவறிதல் ;  குறள் எண் - 212 ).

இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய வரலாறை உள்ளிறுத்திய ஒரு குறள் மேல்வைப்பு வெண்பாவை  இந்தப் பதிவில் அளிக்கிறேன். எப்போதும் போல், வெண்பாவின் மூன்றாம், நான்காம் அடிகளில் வள்ளுவரின் குறள். 

அன்புடன்

ரமேஷ்


தான்பெற்ற  நெல்லிக் கனியினையே அவ்வைக்கு         
தானமாய்த் தந்தான் அதியமான்   அன்புடனே 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு

குறிப்பு :
இதை பதிப்பித்த பின்னாலே , " தானமாய்த் தந்தான் " என்று இயற்றி இருப்பது , சற்றுத் தவறோ  என்று தோன்றியது. அதனால் , அதே கருத்துள்ள வேறு ஒரு பாடலைப் பதிவு செய்து , இப்பதிவைப் புதுப்பித்து இருக்கிறேன். 

உயிர்காக்கும் நெல்லிக் கனியைத் தயங்காமல்   
அவ்வைக்கு    ஈந்தான்  அதியன்  இசைவுடனே 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு

The English version of  Suththananda Barathiyar

All the wealth that toils give 
Is meant to serve those who deserve.

The Meaning :

All the wealth acquired painstakingly by one , is for the exercise of benevelonce to the deserving  and not for his own benefit .  

PS : The translation by Rev.Pope differs from most of the other versions. 
It goes like this :
All the wealth acquired with perseverance BY THE WORTHY, is for the exercise of benevolence. 
Most of other translations, both in Tamil and English , say it is for the benevolence TO THE WORTHY ( தக்கார்க்கு ) , which seems to the correct interpretation.

No comments:

Post a Comment