Search This Blog

May 29, 2016

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை

எனக்குள் கவிதை எப்படி எழுகிறது?

அன்புடன்

ரமேஷ்

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை
எதுகைமோனை பார்த்திடாமல்  வந்தக் கவிதை
வந்திக்கும் கலைமகளருள் தந்தக் கவிதை
அதனாலே நான்எழுதும் சொந்தக் கவிதை.

கண்மூடி களைப்புடன்நான் உறங்கும் போது 
உள்மனதின் கனவினில் மிதந்த கவிதை
பழம்நழுவிப் பாலில் விழுந்ததைப் போல
எண்ணங்கள்   எழுத்துள்ளே  விழுந்த கவிதை 

மனம்புதைத்த நினைவுகளை நெம்பி எடுத்து
வார்த்தைகளாய் வடித்தும கிழ்ந்த கவிதை.
தினம்தினம் நான் காணுகின்ற காட்சிகளையெலாம்
தின்றுஅசை போட்டுயெ ழுந்த கவிதை.  

சீர்தளை அடி செப்பலோசை தவறினாலும்
செந்தமிழின் சிறப்புடனே சிந்திய கவிதை.

நீர்சுமக்கும் மேகங்கள் மலை முகட்டிலே
பார்நனைக்கும் மாரிதன்னைப் பொழிவது போலே
நான்சுமக்கும் எண்ணங்கள் மனதிற் குள்ளே
தேன்சுமக்கும் மொழியாய்ப்பொ ழிந்த கவிதை




 

1 comment:

  1. What a lovely idea pa! And the audio enhances the experience, way to go!

    ReplyDelete