Search This Blog

May 22, 2016

காந்தி சொல்லைத் தட்டாதே!


காந்தி சொல்லைத் தட்டாதே!

நான்கு மாநிலங்களிலும் , புதுச்சேரியிலும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

இது பற்றிய சில பத்திரிகை / ஊடகச் செய்திகள் வருமாறு :

செய்தி 1-- பாண்டிச்சேரி தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
செய்தி 2-  பாண்டிச்சேரியைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.
செய்தி 3 - தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைமை காரணமல்ல.
செய்தி 4 - ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் படவேண்டும் -- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேட்டியின் போது.

இவைகளைப் படிக்கும் போது எழுந்த  எண்ணங்களின் விளைவு இந்தச் சிறு பாடல்.

அன்புடன்

ரமேஷ்

சுதந்திரம் கிடைத்த உடனே
     காங்கிரஸ் கட்சி  யினையே
          கலைத்திட வேண்டு  மென்று
               அன்றொரு  காந்தி*  சொன்னார்.   * மகாத்மா

பதவியும் பவிசும் வேண்டி
      பிறர் அதைக் கேட்கவில்லை.
          காந்தியின் சொல்லை மறுத்து
               கட்சியை ஆட்சியில் வைத்தார்.

விதவித  மாகப்  மிகப்பல 
     தவறுகள், ஊழல்கள் செய்து
          அறுபது ஆண்டுகள் ஆண்டு
               ஆண்டியாய் நாட்டைச் செய்தார்.

"இதுவரை  இழைத்த கொடுமை
     போதுமே"  என்று எண்ணி
          கட்சியை இன்றழிக்க 
               இன்னொரு  காந்தி**   வந்தார்.    ** ராகுல்

3 comments: