Search This Blog

May 6, 2016

நேயர் விருப்பம் 2- காதல் பற்றிய ஒரு கவிதை.

நேயர் விருப்பம் 2-  காதல் பற்றிய ஒரு கவிதை.

எனக்கு வந்த இரண்டாவது நேயர் விருப்பம், காதல் பற்றிய ஒரு கசல் கவிதை  எழுதுவது பற்றி.  

இந்த விருப்பம் தெரிவித்தவர் நண்பர் S .V . ராமன் .

முந்திய விருப்பத்தைப்  போல் அல்லாமல், இது எனக்கு கொஞ்சம் தலைவலியைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது----காதல், கசல் எழுதுவது--- ஆகிய இரண்டிலும்  முன் அனுபவம் இல்லாததால் ! 

.
இருந்தாலும், என் கற்பனைக்குதிரையை சற்று தட்டிவிட் டதில் எழுந்த  இந்த கவிதையை ,  இது பற்றி நன்றாகத் தெரிந்த S .V . ராமனுக்கு அனுப்பி அவரது  அங்கீகாரம்  பெற்றுவிட்டேன்.         (  தப்பாக நினைக்காதீர்கள்;.நிறைய கசல்களை,  அர்த்தம் புரிந்து கேட்டதால் அவருக்கு வந்த அனுபவம் அது!)
படித்து மகிழுங்கள் !

அன்புடன்

ரமேஷ்


சித்திரப்  பெண்ணே !

சித்திரப்  பெண்ணே உன்  நினைப்பால்
-----நித்திரை நிதமும் நான் தொலைத்தேன்
கத்திரி வெய்யில் எரிப்பது போல்
-----உன் நினைவுகள் என்னை எரிக்குதடி

பத்தரை மாற்றுத் தங்கத்தைப்  போல்
-----பிரமன் உன்னை படைத்துவிட்டான் 
இத்தரை முழுவதும் தேடிவிட்டேன்
-----உன் அழகுக் கோரிணை இல்லையடி.

மு(க)த்திரை போட்ட மதிமுகத்தை
-----முழுதாய்க் காட்ட மறுத்து விட்டாய். 
எத்தனை முறை நான் கேட்டிடினும் உன்
-----இதயம் இன்னும் இளகவில்லை.

முத்தம் ஒன்று உன்னிதழில்
-----முத்திரை என்று நான் பதிப்பேன்?
நித்தம் உந்தன் நினைவாலே
-----சித்தம் கலங்கிப் பித்தானேன்.

மைவிழி திறந்தென்னைப் பார்த்திடுமோ
-----கைநுணி  நகமென்னைத் தீண்டிடுமோ?
கோர்த்திரு   கைகளு   மொன்றோ   டென்று 
-----சேர்த்தெனை அணைத்திடும் நாள் வருமோ?

2 comments:

  1. Your horizon is now widning. Great work.

    ReplyDelete
  2. THANKS, NK. IF PEPLE LIKE YOU CAN GIVE IDEAS, I CAN PUT THEM INTO KAVITHAI FORM!

    ReplyDelete