Search This Blog

Mar 17, 2016

JNU - வில் சுதந்திரம் ( ஆசாதி )----ஒரு கார்ட்டூன் , ஒரு கவிதை !


கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சி, ஊடகங்கள், பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பரபரத்த ஒரு விஷயம் JNU வின் கனையா குமாரின் கைதும் , விடுதலையும்!

 அதைப் பற்றி, ஆதரித்தும், எதிர்த்தும் தொலைக்காட்சிகளில் பேசிக் கூச்சலிட்டதைக் கேட்டு அலுத்து, வெறுத்துப் போய் இருப்பீர்கள்.

ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது  அல்ல!

சில வருடங்களுக்கு முன் கனையா குமார்  JNU நிர்வாகத்தால் 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டார் என்ற  ஒரு விஷயம்  , வெளியில் வந்தது!

எதற்காக அபராதம் ?

வெட்ட வெளியில் சிறுநீர் கழித்ததற்காகவும் , அதைத் தட்டிக் கேட்ட ஒரு பெண்ணை மிரட்டியதற்காகவும் !

" சுதந்திரம் ( ஆசாதி )வேண்டும்  " என்று கோஷம் எழுப்பிய  JNU மாணவர்களுக்கு வேண்டும் இன்னொரு  சுதந்திரமா இது ? " என்று நினைக்கத் தோன்றியது!

இதைப் பற்றிய ஒரு சிறு குறும்பாடலும் , ஒரு குறும்புக் கார்டூனும் !  

இந்த கார்டூன் என்னுடைய முதல் முயற்சி!  யாருடைய மென்னுணர்ச்சிகளையும் புன்படுத்தாதென்று நம்புகிறேன்!

அன்புடன்

ரமேஷ்


 
 
விதம்விதம்  ஆக   மிகப்பல
     சுதந்திரம் வேண்டும் என்று
நிதம்நிதந்  தோறும்  நேரு
     பல்கலைக் கழகத்தில் கூடி
கதறியே கோஷங்கள் போடும்
     மாணவக் கண்மணி காள்!
இதுவும்நீர் விரும்பி  வேண்டும்
     சுதந்திரத்தில்  ஒர்வகை தானோ
 

2 comments:

  1. Decent one for a maiden attempt....but would like to see more punch!

    ReplyDelete
  2. Decent one for a maiden attempt....but would like to see more punch!

    ReplyDelete