Search This Blog

Dec 21, 2015

என்ன பதில் நான் கூற ?



சென்ற மாதம் சென்னையில் எங்கும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் வீட்டுக்குள்ளும் , வெளியேயும் தண்ணீர் நிரம்பி வீட்டுக்குள்ளே அடைந்திருந்தவர்களில் நானும் ஒருவன். அதிர்ஷ்டவசமாக என் வீட்டுக்குள் அவ்வளவு தண்ணீர் வரவில்லை. பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் " எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் " என்று வற்புறுத்திய போதிலும், அந்தத் தேவை எழவில்லை. ஆனால், என் நண்பன் ஒருவனுடைய அனுபவம் இது! இப்படியும் சிலர்! படியுங்கள்.

அன்புடன்

ரமேஷ் 


என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.


please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .

அடைமழையின்   காரணத்தால்   அடையாறின்.    இரு கரையும்
உடைந்துள்ளே   வெள்ளம்   புகுந்திட்ட    காரணத்தால்
தாழ்வான   பகுதிகளில்   வாழுகின்ற   மக்களெல்லாம்
ஆழி வந்து  சூழுமுன்னே    வீடு விட்டு    ஓடு என

சன்செய்தி ,    பீபீசீ ,    சீஎன்என் ,    வாட்ஸ் ஆப் என
இன்னபிற    இணையங்களில்    பறையறைந்த   தை அறிந்து
பெங்களூரில்,   பம்பாயில் ,    சிங்கப்பூர் ,    நியூயார்க்கில்
எங்கெங்கோ    வசிக்கின்ற    நண்பர்களும்    உறவுகளும்

எங்களால்    செய்வதென்ன    இப்போது    என வருந்தி,
தங்குகின்ற    இடம் விட்டுப்     பெயர்ந்துவிடு    எனப்பதைத்தார்!

எட்டுத் தெரு    தள்ளி நீர்    எட்டாத    உயரத்தில்
எட்டு மாடிக்    கட்டடத்தில்   வசிக்கின்ற    உறவுகளோ
தொட்டால்    சுடும் என்று    தீயைத் தவிர்ப்பது    போல்
எட்டி நின்றார்;    எங்களுடன்    எந்த ஒரு     தொடர்புமின்றி.

வெள்ளமெல்லாம்    நன்றாக    வடிந்தபின்னே     எனை அழைத்து
"உள்ளமிகத்    துயருற்றோம்;    உம்துன்ப    நிலைபற்றி
இப்போதேதான்    அறிந்தோம்!    உம்குடும்பத்தினர்    எல்லாம்
அப்போதே    என்னில்லம்    வருவதற்கேன்    வெட்கமுற்றீர் ?

நான் வேறு,    நீ வேறோ?    ஏனிந்தத்    தயக்கமென்று
தேனொழுகக்    கேட்டாரே!    என்ன பதில்    நான் கூற ?

No comments:

Post a Comment