Search This Blog

Aug 19, 2015

பாராளுமன்றத்தில் கலாட்டா


பதிவு எண்  -- 3


சென்ற வாரம்,  விநாயகர் பதிகத்தை அடுத்த பதிவில் பதிப்பேன் என்று கூறியிருந்தேன். ஓவ்வொரு பதிகப் பாட்டும் விநாயகர் பற்றிய ஒரு கதையைக்  குறிப்பதாக அமைந்துள்ளதாலும், சில கதைகள் படிப்பவுருக்குப் புதிதாக இருக்கலாம் என்பதாலும் , அந்த அந்த பாடல்களுக்கு நேராக , சம்பந்தப்பட்ட கதை பற்றிய சிறு குறிப்புகளை இணைக்கும் ஒரு நகாசு வேலை செய்துகொண்டிருக்கிறேன். படிப்போரும் , பிள்ளையாரும் இன்னும் சில நாட்கள் பொறுத்தருள்க!

இப்போது----

சென்ற வாரங்களில் ஆங்கிலத் தொ(ல்)லைக்காட்சி சேனல்களிலும் , பத்திரிகைகளிலும் பர பரவென்று அடிபட்ட நிகழ்வுகள் இரண்டு .

ஒன்று - பார்லிமென்ட்டில் கூச்சல்-குழப்பம் விளைவித்து எதிர்க்கட்சிகள் - முக்கியமாக காங்கிரஸ்- நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்தது.

இரண்டு- பாராளு மன்ற காண்டீனில் , அங்கத்தினர்களுக்குக் கிடைக்கும் "அநியாய சலுகை விலை (subsidized price ).

இந்த இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து ஒரு குறும்(புக்) கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

 
 




நாடாளு மன்றத்தில் நாள்தோறும் கூச்சலிட்டு

முடக்கிட்ட எம்பீக்கள் எல்லோரும்-- உடல் களைத்து

ஓடியே சலுகை விலைக் கேன்டீனில் சாப்பிட்டு

விட்டார்கள் பெரிய ஏப்பம்.







No comments:

Post a Comment