பிரதோஷப் பாடல் 51
ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே
மீதியுடல் மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே
காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை
ஓதுவரைக் காதலித்து ஆதரிக்கும் நாயகனே
நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே
சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே
பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே
மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!
* புடமிட்ட பொன்
** சாமவேதம்
அன்புடன்
ரமேஷ்