என்னுடைய சித்தி கீதாவின் இன்றைய 80-ஆவது பிறந்தநாளன்று நான் எழுதிப் பகிர்ந்த ஒரு வாழ்த்துப் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
கீதா -80
எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் எங்கள் அருமை கீதாவே
இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி இந்தப்பாடல் எழுதுகிறேன்
ஐந்து பேர்களில் கடைக் குட்டி ; அவர்களுள் இவளே படு சுட்டி!
வாய் பேசுவதில் வெகு கெட்டி; அனைவரும் கேட்பார் கைகட்டி!
தனித்துவத் தன்மை படைத்தவளாம், சரியெனப் படுவதை செய்பவளாம்
எந்த எல்லைக் கோட்டுள்ளும் இவளை வரையிட இயலாதே.
வாழ்க்கைப் பாதையில் வழுக்கல்கள் பலவும் இருந்தது உனக்கெனினும்
வீழ்ந்து விடாமல் எழுந்திட்டு வாழ்ந்து அவற்றை வென்றிட்டாய்.
மகனும் மகளும் உறவுகளும் உனக்குத் துணையாய் இருக்கையிலே
மகிழ்வுடன் மிகப்பல நாளின்னும் வாழ்ந்திட வாழ்த்துகள் பாடுகிறோம்
தடைகளை உடைக்கும் திட மனதை விடைவா கனத்தான் அருளிடுவான்!
உடலுறு குறைகள் விடுபடவே உமையொரு பாகன் உதவிடுவான்!
No comments:
Post a Comment