ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்
நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.
இது குறித்து ஒரு பாடல்!
இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே சதமெடுத்து சாதனை புரிந்தார்!
இது பற்றியும் ஒரு பாடல்!
இரண்டும் வெண்பா வடிவில்.
அன்புடன்
ரமேஷ்
வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே
பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக
நூல்தன்னைப் போலானார் மாநகரின் மக்களெலாம்!
பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று
(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
பால்வடியும் தோற்றத்தால் ஏமார்ந்தே போகாதே!
'பால்'^அடிக்கும் மட்டை பலத்தால் எதிரணியை ^ ball
பாழடிக்கும் *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம் * vaibhav
வாழட்டும் **சூர்யகுலத் தான்! ** suryavanshi
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
CSK needs a much stronger rebuke to fully convey our frustration. Losing is not a single. But losing the way they do, is unpardonable.
ReplyDeleteRight choice of words... Very apt
ReplyDeleteNice .
ReplyDeleteYes ,nice one. An Elegy? வெண்பாவில் சம்ஸ்கிருத வார்த்தையய் தவிர்த்து இருக்கலாமோ?
ReplyDeleteஅழகிய நடையில், அருமையான வெண்பா.
ReplyDeleteGreat and versatile poems in stock....
ReplyDelete