Search This Blog

Jan 15, 2024

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 







மங்களப் பொங்கல்தைத் திங்களின் முதல்நாள்

செங்கதிர் பரப்பி சுடர்விடும் சூரியன் 
தென்னரைக் கோளம் விட்டே விலகி 
வடதிசை நோக்கி வருமின் நாளில்
செங்கல்கள் அடுக்கி செய்தவோர் அடுப்பில் 
செந்தழல் வந்தெழச் சிறுவிறகெரித்து 
மண்கலப் பானை மேல் மஞ்சளைச் சுற்றி
பெண்கள் கூடிக் குலவை எழுப்ப 
வெல்லம் நெல்லரிசி பாலுடன் சேர்த்து
நல்சுவைப் பொங்கல் பொங்கிடச் செய்வோம்.

உறவுகள் சிறந்து உள்ளங்கள் சிரிக்க
அறம்பல நிறைந்து  அல்லவை அகல
நெறிமுறை தவறா அரசுகள்  அமைய
இறைவனை  இந்நாள் இறைஞ்சிப் பணிவோம்.  

அன்புடன் 

ரமேஷ் 



10 comments:

  1. புதுப் பொங்கல் போல் சிறப்பான வாழ்த்து மடல், தித்திக்கும் தேன் தமிழில்
    திக்கெட்டும் பரவட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நண்பரே! யாரிடமிருந்து வந்தது என்று உங்கள் மடலில் குறிப்பிடப் படவில்லை. Annonymus என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் பெயரைக் குறிப்பிடவும்.

      Delete
  2. Excellent, Ramesh !
    RVR

    ReplyDelete
  3. தேன் பாய்ந்த உணர்வு உங்கள் கவிதை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி, பெயரிட மறந்த நண்பரே!

      Delete
  4. கவிதை தமிழில் தேன் மட்டுமா சொட்டுகிறது....அமுதும் அல்லவா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ராம்கி!

      Delete
  5. சர்க்கரைப் பொங்கல் பால் பொங்கல் போன்றவற்றை விட இக்கவிதைப் பொங்கல் அல்லவா இன்னும் தித்திக்கிறது?N Krishnamoorthy

    ReplyDelete
  6. நன்றி, பெயரிட மறந்த நண்பரே!

    ReplyDelete