Search This Blog

May 16, 2020

நீள்நெடும் நடைப் பயணம்

நீள்நெடும் நடைப் பயணம் 

கோவிட் தீ நுண்மியின் தாக்கத்தால் வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழும் வழி தெரியாமல் தவிக்கிறார்கள். வீடு செல்ல வாகன வசதிகள் ஏதுமின்றி, நடைப்பயணமாகவே  தத்தம் ஊர்களுக்கு செல்லும் பரிதாப நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . இது விரைவில் மாறுமா ?

ரமேஷ்






நீர்மட்டம்  நிலத்தடியே   வறண்டிட்ட நிலையாலே
நீர்விட்டு நிலமுழுது வாழ்ந்திருந்த மக்கள் பலர்
சோறிட்டு சொந்தங்களை வாழ்விக்கும் வழிதேடி
வேர்விட்டு வாழ்ந்திருந்த ஊர்விட்டு வெளிச்சென்று
சேர்ந்திட்ட பெருநகரில் சிறுதொழில்கள் செய்துவர,

ஆர்த்திட்டு மேலெழுந்த ஆழியன்ன கோவிடென்று
பேரிட்ட பெருநோயின் தாக்கத்தால் தொழிலிடங்கள்
மூடிட்ட தால்மாத வருமான மேயின்றி
சேர்த்திட்ட சிறுதொகையும் கரைந்திட்ட காரணத்தால்
சோர்ந்திட்ட மக்கள்என் செய்வதென அறியாமல்
சேர்ந்திட்டு எழுப்பும்குரல் செவிடர்செவிச் சங்காக

யாரிட்ட பிச்சையையும் எதிர்நோக்கி நிற்காமல்
தாரிட்ட சாலையிலே தகிக்கின்ற தணல்வெயிலில்
போரிட்டு நடக்குமிவர் போய்வீடு சேர்வாரே?

பாதிப்  பாதையிலே  நீரின்றி உணவின்றி
நடக்கவும் முடியாமல் நாதியின்றிச் சாவாரோ?

சாலை ஓரத்திலே  களைப்புடனே  உறங்குகையில்
விரைந்துவரும் வாகனங்கள் இவருயிரைக் குடித்திடுமோ?

தண்ட வாளத்தையே தலையணையாய் வைத்திவர்கள்
கண்ணயரும் நேரத்திலே விண்ணுலகம் சேர்வாரோ ?

வீடுபோய்ச் சேர்ந்தாலும் விடுபடுமோ வாட்டங்கள் ?
விடுகதையாய்ப் போனயிவர் வாழ்வுக்கோர்   விடிவுண்டோ  ?







2 comments:

  1. Very nicely enumerated the problems of the migrant poor. Some of what one sees in the media is really heart rending. Well written Ramesh. ST

    ReplyDelete