Search This Blog

Dec 7, 2019

குமரிக் கண்டம்


திருவிளையாடல்  பாடல்கள் - ஒரு விளக்கம் 

சென்ற திருவிளையாடல் பாடல் 13-ல் , இந்திரனின் ஆணைக்கு உட்பட்ட  , வருணனின் ஏவலால் , கடல் மதுரையை மூழ்கடிக்க வந்ததாகவும், அதை 
வேலெறிந்து பாண்டிய அரசன் வற்றச்செய்ததாகவும்  இருந்தேன்.
இது பற்றி  நண்பர் சுந்தர் ' மதுரையை எப்படி கடல் கொள்ளமுடியும்?"  என்ற வினாவை எழுப்பியத்தின் விளைவே இந்தப் பதிவு.

அக்கேள்விக்கான விடை - 
பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை   இப்போதைய மதுரையல்ல! அது கடலில் மூழ்கி அழிந்த தென்மதுரை .

பல தமிழ் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இப்போதைய கன்னியாகுமரிக்கு தென்புறம் , ஒரு  நிலப்பகுதி இருந்தது. இது குமரிக் கண்டம் (லெமுரியா ) என்று அழைக்கப்பட்டது. ( வரைபடம் பார்க்கவும் ).  இங்கிருந்த மதுரையே முதல் சங்கத்தின் இருப்பிடம். 

இப்பகுதியை   பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள்.  அந்த மன்னர்களில் சிவபெருமான், முருகர் ஆகியோரும் அடங்குவர். திருவிளையாடல் புராணம் நடந்தது இந்த பாண்டிய நாட்டில் என்று கருதலாம்.





குமரிக் கண்டம்


கடலால் இப்பகுதி அழிந்தபிறகு, கபாடபுரம் பாண்டிய நாட்டின் தலைநகராக ஆனது. இடைச்சங்கம் இங்கு அமைக்கப்பட்டது.

இதுவும் கடலுக்கு இரையானபிறகு , பாண்டியநாடு இன்றைய தமிழத்தின் தென் பகுதியில் அமைந்தது.  இப்போதைய மதுரை அதன் தலைநகரானது. இதுவே  கடைச்சங்கம் அமைந்த இடம்.

இத்தகவல்கள் சில தமிழ், சமஸ்க்ருத நூல்களின்  அடிப்படையில் கணிக்கப்பட்டவை. விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் விவரம் அறிய விரும்புவோர் https://www.slideshare.net/sagarben/lemuria-56619904 என்ற தொடர்பை பார்க்கவும்.


No comments:

Post a Comment