Search This Blog

Oct 9, 2018

போனாப் போகட்டும்


போனாப் போகட்டும் 




நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே









மாங்கன்னை நான்நட்டு                       
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே






வேலிக்குப் பக்கம் நட்ட                            
எலுமிச்சஞ் செடியினிலே 
பச்சமஞ்ச நிறமாக  
காச்சிருந்த பழமெதையும் 
மிச்சம்மீதி வெக்காமல் 
பறிச்சுக் கொண்டானே - அதயும் 
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே 






தேரிழுத்து தவமிருந்து                            
மாரியம்மன்  அருளாலே
காத்திருந்து பெத்துப்போட்டு 
பாசமா வளத்தபொண்ணை
வீடுதாண்டி கூட்டிப்போயி
ஓடிப் போனானே - அதத்தான்
போனாப்போ கட்டுமின்னு
விடமுடி யலையே!




கவிதை  எழுதியது  :  கனித்தோட்டம்  ரமேஷ் 

1 comment: