Search This Blog

Jan 21, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 8

ஈசாவாஸ்ய உபநிஷத் -  செய்யுள் 8

இந்த எட்டாவது செய்யுள் , ஆன்ம அனுபூதி அடைந்தவனின் அனுபவத்தை விளக்குகிறது.
இந்தச் செய்யுளுக்கு, சற்றே வேறான இரு விளக்கங்களை நான் படித்தேன். ஆனால் இந்தப் பதிவில், பொருளும், அதைத் தொடரும் பாடலும், ராமகிருஷ்ண மடத்தின் வெளியீட்டைப் பின் பற்றி உள்ளன.

அன்புடன்

ரமேஷ்
           
8            ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம் 
                        அஸ்னாவிரகம் சுத்தமபாபவித்தம் I 
               கவிர்மனீஷீ பரிபூ: ஸ்வயம்பூர் யாதாதத்யதோஅர்தான் 
                         வ்யததாச் சாச்வதீப்ய: ஸமாப்ய:    II
பொருள் 

ஆன்ம அனுபூதி பெற்றவன் , அனைத்தின் ;உட்பொருளையும் காண்பவன்; மனத்தை   வயப்படுத்தியவன்;  எல்லா அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன்; அனைத்துப் பொருள்களின் உண்மை இயல்பை அறிந்தவன்; அவன் உடம்பற்ற, தசைகள் இல்லாத, தூய , பாபமற்ற இறைவனை அடைகிறான்.


பாடல் 

மொத்தமாய் சித்தம் வசப்படுத்தி
----------அனைத்தின் உட்பொருள் தனையுணர்ந்து
எதனையும் எவரையும் சாராமல்
----------இறைநெறி அறிவினை உள்ளடக்கி
ஆத்தும அனுபூதி யைப்பெற்றால்
----------அதன்பின் அறிவதற்  கேதுமுண்டோ?'
உடலுறு தசையென் பெதுவுமிலா
----------ஒளிமிகு தேசனைச் சென்றடைவர்..

English  Translation

One who has achieved complete realisation ,
that person is able to reach Him ,
the one who is  All pervasive,
Pure, Bodiless, Taintless, Untouched by sin,
Immanent and Transcendent.



2 comments:

  1. .ஈசாவாஸ்யத்தை எங்களால் ஈஸியாக வாசிக்க முடியும் என்று உணர்த்தி விட்டீர்கள்

    ReplyDelete
  2. நன்றி , 'pun'டிதரே!

    ReplyDelete