Search This Blog

Jul 4, 2016

நினைத்ததும் நடந்ததும்



நினைத்ததும் நடந்ததும் 

பல சமயங்களில் நாம் மிகவும் எதிர்பார்ப்புடன் , மகிழ்ச்சியைத் தரும் என வேண்டி , செய்யும் செயல்கள் ஏமாற்றத்தில் முடிகின்றன.

காலையில் சூரியன் கடலிலிருந்து எழும்  உதயக் காட்சியைப்  பார்க்க எண்ணி கடற்கரைக்குச் சென்று காத்திருக்கையில் , மேகமூட்டத்தால் சூரியன் முற்றிலும் மறைக்கப்பட்டு ஏமாந்த அனுபவம்  எல்லோருக்கும்
ஒரு முறையாவது ஏற்பட்டு இருக்கும்!

இதுவே பரவாயில்லை!

சில சமயம் முற்றும் எதிர்பார்க்காத சிலவும் நேரக்கூடும் !
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இதோ!

மேலே படியுங்கள் !

அன்புடன்

ரமேஷ்


 கலைந்த கனவுகள் 


ஆற்றின் ஓரப்  பூங்கா வினிலே
காலை நேர இளங்குளி ரினிலே
காற்றின் கரங்களின் அணைப்பில் அமிழ்ந்து
கலையா மௌனச் சூழலில் அமர்ந்து
இயற்கையை இனிதாய் ரசிக்க வேண்டியே --------------
 
காலையில் எழுந்து காலணி அணிந்து
சாலையில் கூட்டம் கூடிடும் முன்னே
பூங்கா சென்று அங்கொரு இருக்கையில்
பாங்காய்  அமர்ந்து வியர்வை முளைத்த
முகத்தைத் துடைத்து மேலே பார்க்கையில்   -------
 
பறவை எச்சம் தலையில் விழுந்தது !!!

 

2 comments: