Search This Blog

Oct 4, 2015

புது நாளும் உதயம்

காலையில் நடைப்பயிற்சி  செய்ய சிறப்பான இடம் அடையாற்றின் கரையில் அமைந்த நிழல்கள் மரப் பூங்கா.
காலைக் குளிர் விலகுமுன்னே , அங்கு சென்று, அந்த அழகையும்,அமைதியையும்அனுபவித்தபோது எழுந்த பாடல் இது!
ஒரு புதிய நாளின் பிரசவத்தைப் பகிர்ந்து கொள்வோம்,  வாருங்கள்!


ரமேஷ்


புது நாளும்   உதயம்


அதிகாலை    நேரம்    அடையாறி    னோரம்
நடைபழகும்    நிழற்பூங்கா   வில்நின்   றிருந்தேன்


இதுகாறு   முணராதோ   ருள்ளத்து   அமைதி
இதயம்    முழுதும்    நிறம்பிடப்     பெற்றேன்.


வானத்தைக்     கிழித்தெழும்    பரிதியின்   சுடர் - இரவின்
மோனத்தை    கிழித்தெழும்     புள்ளினத்தின்   ஒலிகள் 

 
ஆற்றைக்    கிழித்தோடும்      நீள்படகின்     வரிசை- செஞ்
சேற்றைக்    கிழித்தெழுந்து     சிறுவிதைகள்      பிரசவம்.


நிட்(ஷ்)டை     கலைந்தெழுந்து       இலையாட்டும்     மரங்கள்- சிறு
மொட்டைக்     கிழித்துத்தன்     இதழ் விரிக்கும்    பூக்கள்.


சோர்வைக்    கிழித்துவிடும்    சுகமான    காற்று - மன
ஏட்டைக்    கிழித்து எழும்     நற்கவிதை    ஊற்று..

நேற்றைக்    கிழித் தின்றோர்     புது நாளும்   உதயம் - நற்
பேற்றைப்   பெற்றுப்பின்     பொலியுமென்   இதயம்.





 

No comments:

Post a Comment