Search This Blog

Apr 26, 2025

பெகல்காம் படுகொலை

எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்துக்களை மட்டுமே கொலைசெய்து    இந்தியாவில்  மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். 

ஜெய் ஹிந்த் !

ரமேஷ்  




பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில் 

திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக்  கொலைசெய்தார்

இந்துக் களைமட்டும் -  இந்தச் செயலெதிர்த்து  

இந்தியனே பொங்கி எழு !


ஆதார  அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்

போதாமல்  உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்

மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு 

கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை 

ஏற்காது  எம்பார தம்


பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்

உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே  

ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த 

பாவிகளைத் தேடிக்கொல் வோம் 








Apr 25, 2025

IPL -2025 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி ??

IPL -2025  -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி??!


ஆறாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது : 

சேறிலே கால்புதைந்து ஒடத் தவிப்பவனைப் போல் 

ஆறிலே ஒன்றை மட்டும் இன்றுவரை வென்றதாலே 

மாரிலே சந்தனம்போல் மணக்கின்ற நிலைமை மாறி 

ஆர்.ஐ.பி. எழுதும் நிலைமை அய்யகோ வந்ததிங்கே !

ஏழாவது ஆட்டத்தின் வெற்றிக்குப்  பின் எழுதியது 

கருமேகக் கூட்டத்தின் விளிம்பினொளிக் கீற்றைப்போல்  
சரிபாதி ஆட்டங்கள் முடிகின்ற தருவாயில் *                * 7 out of 14
பரிதாப நிலைசற்றே மாறியதே ! இனிமேலே
ஒருவேளை பெருவாகை பெறும்வேளை வந்ததுவோ? 
 
எட்டாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது

விழுந்து கிடக்கின்ற சி.ஸ்.கே இனியேனும் 
எழுந்து நிற்குமிவ் வெட்டாவது  ஆட்டத்தில் 
என்ற நினைப்பினிலும் மண்விழுந்து மூடியதே 
வென்றதே மும்பை அணி!

இன்று ஒன்பதாம் ஆட்டத்திற்கு முன்பு 

பத்தாம் இடத்திலே பசைபோட்டு அசையாமல் 
கெத்தாய் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் சி.ஸ்.கே
ஒன்பதாம் இடத்துள்ள காபித்தூள் குழுமத்தை*      * sunrisers  
இன்றேனும் காட்டுமோ வென்று?

அன்புடனும்,எதிர்பார்ப்புடனும் 

ரமேஷ்