எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்துக்களை மட்டுமே கொலைசெய்து இந்தியாவில் மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும்.
ஜெய் ஹிந்த் !
ரமேஷ்
பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில்
திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக் கொலைசெய்தார்
இந்துக் களைமட்டும் - இந்தச் செயலெதிர்த்து
இந்தியனே பொங்கி எழு !
ஆதார அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்
போதாமல் உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்
மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு
கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை
ஏற்காது எம்பார தம்
பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்
உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே
ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த
பாவிகளைத் தேடிக்கொல் வோம்